என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக வளர்ச்சி"
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு மக்களுக்கு எதனையும் செய்யாமல் ஏமாற்றிவிட்டது. பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி,வரி, சிறுதொழில்களை நசுக்குதல், விலைவாசி உயர்வு என மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் மூலமாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் தொழில்நிறுவனங்களே அதிக பலன் பெற்றுள்ளன. மற்ற தொழில்நிறுவனங்கள் எல்லாம் நசுக்கப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும், கஜா புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் கூட மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உடனடியாக வரவில்லை. ஆனால் இப்போது அடிக்கடி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசு தமிழக வளர்ச்சிக்காக எதனையும் செய்ய முன்வரவில்லை. இதனால் பா.ஜ.க. அரசையே ஜெயலலிதா வெறுத்தார். ஆனால் இன்றுள்ள எடப்பாடி தலைமையிலான அரசு மோடியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. ஏனென்றால் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் அதிகளவில் ஊழல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதற்கு துணையாக மோடியின் உதவி தேவைப்படுவதாலேயே இப்படி பேசி வருகின்றனர். கன்னியாகுமரியில்13-ந் தேதி நடைபெறும் கூட்டம் அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #SanjayDutt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்