search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக போலீஸ் அதிகாரி"

    சுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #IndependenceDay
    சென்னை:

    சுதந்திர தின விழாவையொட்டி ஆண்டுதோறும் தகைசால் மற்றும் மெச்சத்தகுந்த பணிகளுக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா ஜனாதிபதி விருது பட்டியலை மத்திய அரசு நேற்று மாலை வெளியிட்டது.

    அந்த பட்டியலில் தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. எம்.என்.மஞ்சுநாதா-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. காவலர் வீட்டு வசதி வாரியம். 2. கே.பி.சண்முகராஜேஸ்வரன்-தென் மண்டல ஐ.ஜி. மதுரை. 3. எஸ்.திருநாவுக்கரசு-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்பு துறை. 4. பி.விஜயகுமாரி-சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர். 5. எம்.பாண்டியன்-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய சூப்பிரண்டு. 6. எஸ்.ராஜேந்திரன்-சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர். 7. எஸ்.முத்துசாமி-சென்னை பரங்கிமலை துணை கமிஷனர். 8. பி.பகலவன்-சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர். 9. எ.முகமது அஸ்லாம்- துணை போலீஸ் சூப்பிரண்டு காஞ்சீபுரம் மாவட்டம். 10. ஆர்.விஜயராகவன்-திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு. 11. எஸ்.ஆனந்தகுமார்-கோவை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு. 12. டி.பாலமுருகன்-சென்னை கடலோர காவல் குழும துணை சூப்பிரண்டு. 13. டி.சேகர்-தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை சூப்பிரண்டு. 14. எம்.குமரகுருபரன்-சென்னை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு. 15. ஐ.சுப்பையா-நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு.

    16. கே.ராமச்சந்திரன்-திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு. 17. எஸ்.முத்துவேல் பாண்டி- சென்னை நுங்கம்பாக்கம், உதவி கமிஷனர். 18. பி.ஸ்டீபன்-சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர். 19. ஜி.தேவராஜ்-பெரம்பலூர் இன்ஸ்பெக்டர். 20. எ.அண்ணாமலை-சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர். 21. பி.ராஜாராம்-சென்னை பாதுகாப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர். 22. கே.பி.லாரன்ஸ்-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 23. இ.முனுசாமி-சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு. 24. எஸ்.ஜெ.உமேஷ்-தலைமை காவலர், மாநில உளவுப்பிரிவு, சென்னை. 25. எஸ்.ஜஸ்டின் ராஜ்-துணை போலீஸ் சூப்பிரண்டு. எஸ்.சி., எஸ்.டி. கண்காணிப்பு பிரிவு, மதுரை.

    தமிழக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மதியழகன் தீத்தன், தனசேகரன் சிகாமணி, டிரைவர் வெள்ளச்சாமி சுப்பிரமணியன், தீயணைக்கும் படை வீரர் செல்வமணி ஞானகண்ணு ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். 
    ×