search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் நிலைய அதிகாரி கைது"

    மத்திய பிரதேசத்தில் 24 குடும்பங்களின் சேமிப்பு தொகையை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தபால் நிலைய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் பினா துணை தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக இருப்பவர் விஷால் அரிவார்.

    இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் தங்களது பணத்தை டெபாசிட் செய்தனர். அதற்கு அவர் போலியான நிரந்தர கணக்குகளை தொடங்கி உண்மையான பாஸ்புக்குகளை வழங்கி இருக்கிறார்.

    வாடிக்கயைாளர்களின் சேமிப்பு பணத்தை வைத்து அவர் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டார். தபால் நிலைய அதிகாரி விஷால் கடந்த 2 ஆண்டாக 24 குடும்பங்களின் சேமிப்பு பணத்தை வைத்து ஐ.பி.எல். போட்டியில் பந்தயம் கட்டி உள்ளார்.

    ஐ.பி.எல். சூதாட்டம் மூலம் அவர் ரூ.1 கோடி பணத்தை இழந்துள்ளார். இது டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் பணமாகும்.

    இது தொடர்பாக போலீசார் 420 மற்றும் 408 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தபால் நிலைய அதிகாரியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ×