search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஊழியர் தற்கொலை"

    அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஓய்வுபெற்ற தபால் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    நெல்லை மாவட்டம் மதிவண்ணபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). தபால் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை பார்க் டவுன் தெருவில் குடியிருக்கும் மகளை பார்ப்பதற்காக வந்திருந்தார். சுப்பிரமணியனுக்கு நீரிழிவு நோய் உள்ளது. எனவே அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர், மகள் வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உனே அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியன் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடையத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தபால் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    கீழக்கடையத்தை சேர்ந்தவர் ஆதி(வயது55). இவர் அப்பகுதி தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வள்ளி. கடந்த 10 வருடமாக ஆதி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் குடும்பத்தோடு வசித்து வந்தார். 

    இதனிடையே வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 
    ×