என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தன்னார்வலர்களுக்கு"
- பொன்னமராவதியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடை பெற்றது.
- 453 தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை:
பொன்னமவராவதி வட்டார வளமையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் கலந்து கொண்டு, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் ஸ்ரீபிரியங்கா, இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு தன்னார்வலர் கையேடு, பட அட்டைகள், கதை ப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், பொ ன்னமவராவதி வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர்( பொறுப்பு)நல்லநாகு, ஆசிரிய பயிற்றுநர்கள் கல்யாணி, முகம்மது ஆஷாத், யசோதா மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,
இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராசு ஆகியோர் உடன் இருந்தனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 453 தன்னார்வலர்களுக்கும் கையேடுகள் மற்றும் படக்கதைகள், கதைப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்