search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீரில் மூழ்கி"

    • கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.
    • தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் அருகே உள்ள கஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ரேணுகா தேவி (38). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது தாய் வீட்டில் தங்கி தனியார் டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் பாரதி (19). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி தனது நண்பரும் உறவினருமான, அதே கல்லூரியில் படித்து வரும் பரணி (19) என்பவருடன் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.

    இருவரும் கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீச்சல் தெரியாததால் பாரதி கிணற்றில் மூழ்கியுள்ளார்.இதனையடுத்து அவரை காப்பாற்ற முடியாமல் பரணி சத்தம் போட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் மூழ்கி இருந்த பாரதியை மீட்டு, சத்தியங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம்.
    • இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    கரூர் மாவட்டம் தென்னிலையை அடுத்த மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (62).

    இவரது மூத்த மகன் செந்தில் குமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார். இளைய மகன் ராமச்சந்திரன் (33). இவர் தென்னிலை அரசு மேல் நிலைப்பள்ளியில் பகுதி நேர கணினி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    மூத்த மகன் செந்தில் குமார் இறந்ததில் இருந்து, தந்தை பழனிசாமி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று வருதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற பழனிசாமி அதன்பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி கோவில் அருகே பழனி சாமியை அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது பழையூர் சோளக்காளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஒரு உடல் கிடப்பதாகத் தெரிவி த்துள்ளனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த போது அது பழனிசாமி என்பது தெரியவந்தது.

    கொடுமுடி கோவிலுக்கு வந்துவிட்டு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.
    • ரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கண பதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கொடுமுடி:

    கோவை மதுக்கரை மார்க்கெட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (53). இவர் மன்னாதம்பாளை யம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைப்பதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்கள் 150 பேர் வந்தனர்.

    இவர்களுடன் இவரது உறவினர் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த பாலசண்முகம் (44) என்பவரும் வந்து இருந்தார்.இவர் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார் அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போட்டு உள்ளார்கள். உடனே மொடக்குறிச்சி தீயனைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளார்கள். சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்தனர்.

    அவர்கள் நீரில் மூழ்கிய பாலசண்முகத்தை மீட்டு உடனடியாக கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பால சண்முகத்தை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பால சண்முகம் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலை யம்பாளையம் போலீசார் பாலசண்முகம் உடலை ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×