search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்புகள்"

    • யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ஏற்பாடு
    • தண்டவாளத்தின் கீழ்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கோவை புறநகர் பகுதியான மதுக்கரை கேரளா -தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக கேரளா- தமிழகத்தை இணைக்கும் ரெயில் தண்டவாளம் செல்கிறது.

    மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தண்டவாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரெயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

    யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானைகள் எளிதாக கடந்து செல்கின்றன.

    இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்றொரு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றது. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது.

    ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.

    எனவே புதிதாக மேலும் தடுப்புகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். தமிழக அரசின் உத்தரவு வந்த உடன் நிதி ஒதுக்கப்பட்டதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.
    • சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    ஊட்டி,

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த 60 பேர் கடந்த 30-ந் தேதி தனியார் பஸ் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் மாலையில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் தடுப்புச்சுவரில் மோதி 50 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்தை தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யவேண்டும். விபத்து நிகழாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். சாலையோரங்களில் இருபுறமும் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சாலையில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மதுரை

    மதுரை ஆண்டாள்புரம் பழைய மில்காலனி பகுதியை சேர்ந்தவர் ஏசு ராஜா. இவரது மகன் ரோகன் (வயது20). இவர் நேற்று நண்பர் ராதாகிருஷ் ணனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறபட்டார். ஆண்டாள்புரம் பாலத்தில் சென்றபோது தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கிய ரோகன் மீது டயர் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராதா கிருஷ்ணனை அங்கிருந்த வர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கொடூர விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்த பகுதியில் அதிவேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. எனவே தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து இன்று காலை போக்குவரத்து போலீசார் விபத்து நடந்த சாைலயின் நடுவே தடுப்புகள் அமைத்த னர்.

    மேலும் குறிப்பிட்ட பகுதி களில் வாகனங்கள் மெது வாக செல்வதற்கும் நட வடிக்கை எடுத்தனர். விபத்து சிக்கி வாலிபர் இறந்த பிறகு போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மதுரை திருப்பரங்குன்றம் சாலை யில் தமிழ்நாடு பாலி டெக்னிக் கல்லூரி, மதுரா கல்லூரி மற்றும் முக்கிய நிறுவனங்கள், கோவில்கள் உள்ளன. இதனால் அந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்படா ததால் பொதுமக்கள் ஒரு வித பதட்டத்துடனே கடக்க வேண்டியுள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் உள்ள சாலை, ஆண்டாள் புரம் பகுதி, பழங்காநத்தம் சந்திப்பு போன்ற பகுதிகளில் அதிவேகமாக வரும் வாக னங்களுக்கு இடையில் பொதுமக்கள் உயிரை பண யம் வைத்து சாலையை கடக்க வேண்டியுள்ளது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் விபத்துகள் நடக்காமல் இருக்க போலீ சார் வேகத்தடை மற்றும் தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பசுமலையில் உள்ள ஒரு பள்ளி முன்பும் தடுப்புகள் அமைத்து வாகன வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

    • ரெயில்வே கேட் மூடப்படும்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
    • காவல் துறை சார்பில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி யில் பாளை குலவணிகர்புரம் பகுதி போக்குவரத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

    அணிவகுக்கும் வாகனங்கள்

    இதன் வழியாக செல்லும் ரெயில்வே பாதை வழியாக நெல்லை- திருச்செந்தூர் ரெயில்கள் சென்று வருகிறது. தினமும் ஒவ்வொரு முறை ரெயில் செல்லும் போதும் இங்குள்ள ரெயில்வே கேட் மூடப்படும். அப்போது வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் முதல் பாளை பஸ் நிலையம் வரையிலும், மறுபுறம் புதிய பஸ் நிலையம் வரையிலும், அதே போல் பாளை மத்திய சிறை யில் இருந்து எதிர்புறம் செல்லும் சாலையிலும் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரு கிறது.

    இதைத்தொடர்ந்து குலவணிகர்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாளை மத்திய சிறையில் இருந்து மேலப்பாளையம் செல்ல சாலை உள்ளது. ரெயில்வேகேட் மூடி திறக்கப்படும் போது வலது புறம் வாகனங்கள் செல்வ தால் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வந்தது.

    இதனை தவிர்க்க ரெயில்வே கேட்டில் இருந்து வலது புறம் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு போலீசார் அடைத்துள்ள னர். இதனால் பாளை பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிறை கைதிகள் பல்க் வரை சென்று பின்பு அங்கிருந்து திரும்பி மேலப்பாளையம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    • மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.
    • அத்தியாவசிய பொருட்களை மட்டும் வைத்துவிட்டு வெளிப்புறத்தில் தடுப்புகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் கடலோர பகுதியிலிருந்து மீனவ குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகிலேயே சுனாமி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு அரசின் சார்பாக 725 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    இந்த வீடுகள் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உட்புற மேல்தல கான்கிரீட்டுகள் சிதைந்து கம்பிகளும் சிமெண்ட் காரைகளுமே எஞ்சியுள்ளது.

    மேலும் அவ்வப்பொழுது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் அச்சமடைந்த மீனவர்கள் வீட்டின் உள்ளே அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வைத்துவிட்டு வெளிப்புறத்திலேயே தடுப்புகள் அமைத்து தனியாக வசித்து வருகின்றனர்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டுமென மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
    • சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

    சீர்காழி:

    விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிக்காக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் சவுடுமண் குவாரிகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்–கணக்கான லாரிகள் சவுடுமண் கொண்டு–வரப்பட்டு நான்கு வழிசாலையில் கொட்டப்படுகிறது.

    இரவு பகல் என 24 மணி நேரமும் சவுடுமண் ஏற்றிய லாரிகள் நகர் பகுதியை கடந்து புறவழிச் சாலைக்கு சென்று வருகிறது. இந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சவுடு மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த மண் மீது முறையான பாதுகாப்புடன் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசு விதி இருந்தும், அதனை கண்டு கொள்ளாத லாரி ஓட்டுநர்கள் பெயரளவில் ஒரு சில லாரிகளில் மட்டுமே வலைகளை அமைத்துள்ளனர்.

    மாலை 6 மணிக்கு மேல் எந்த லாரிகளிலும் இதுபோன்ற தடுப்புகள் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண்ணை ஏற்றி செல்கின்றனர்.

    இதனால் வளைவுகள், வேகத்தடைகளில் இந்த லாரிகள் செல்லும் போது அதிகப்படியான மண் சரிந்து சாலை முழுவதும் சிதைந்து கிடக்கிறது.

    இதனால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் சவுடு நிறைந்து இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி நேரங்களில் கூட இந்த லாரிகள் நூற்றுக்கணக்கில் இயக்கப்படுகிறது.

    நகர் பகுதி சாலைகள் முழுவதும் சவுடு மண்சிதைந்து கிடப்பதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணில் சறுக்கி விழுந்து அடுத்தடுத்து விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.

    எனவே நான்கு வழிச்சாலைக்கு மண் ஏற்றி செல்லும் லாரிகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து தகுந்த பாதுகாப்புடன் இயக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே மண்ணை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த கல்லணைக் கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது.

    இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் கல்லணை கால்வாயில் கட்டப்பட்ட இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன.

    இந்த நிலையில்மற்றொரு பாலத்தை கட்டும் பணியினை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்டப்பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×