search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கநகை"

    • தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

    கோவை 

    கோவை சலீவன் வீதியில் தனியார் தங்க நகை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்(34)என்பவர் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். இந்த நிறுவனத்தில் இருந்து நகை தயாரிப்பாள ர்களுக்கு தங்கக் கட்டிகளை கொடுத்து பின்னர் அவற்றை நகைகளாக வாங்கி முத்திரை வைக்கும் பணிகளை ஜெகதீஷ் செய்து வந்தார். மேலும் நகைகளின் தரம் மற்றும் ட்ரேட் மார்க் பணிகளையும் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று நிறுவனத்தின் கணக்குகளை மேலாளர் கார்த்திகேயன் சரிபார்த்தார். அப்போது கடந்த 6 மாதத்தில் கணக்கு வழக்குகளில் திருத்தம் செய்தும் கம்ப்யூட்டரில் உள்ள பதிவுகளில் மாற்றம் செய்தும் ரூ.55 லட்சம் மதிப்பிலான 1467 கிராம் தங்க கட்டிகளை ஜெகதீஷ் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜெகதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை நாட்களில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவாடையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்.
    • பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டார–வாடை ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜமால்முகமது. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமைராபானு (43). மகன் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருவதால் கும்பகோணத்தில் வீடு எடுத்து தங்கி மகனுடன் வசித்து வருகிறார். விடுமுறை நாட்களில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவாடையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து தங்கி செல்வார்.

    இந்நிலையில் உமைராபானு தனது மகனுடன் பண்டாரவா–டைக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்கநகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து உமைராபானு பாபநாசம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் பாபநாசம் துணை கண்காணிப்பாளர் பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    ×