search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொப்போ"

    • சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முறையான பணி வழங்கப்படவில்லை என்று புகார்
    • ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என்று உறுதி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராணி தோட்டத்தில் 3 டொப்போக்கள் உள்ளது. இங்கு இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    ராணி தோட்டம் டொப்போ-3ல் இருந்து இயக்கப்படும் பஸ்களில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முறையான பணி வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக தொழிற்சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் இன்று காலை ராணி தோட்டம் டொப்போ-3ல் இருந்து வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்ற பஸ்சை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்களுக்கு முறையான பணி வழங்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து டொப்போ அதிகாரிகளும் தொ.மு.ச நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இன்னும் ஒரு வார காலத்திற்குள் பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் ராணி தோட்டம் டொப்போ முன்பு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×