search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி வருகை"

    இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை, டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India
    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசுமுறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இரண்டு நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இன்று இரவு சுமார் 9 ம்ணியளவில் டெல்லி வந்து சேர்ந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். மேலும், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
     
    பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சவுதி இளவரசர் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சவுதி கூறினார். வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான எங்கள் பொதுவான நாட்டத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமான கூட்டாளியாகவும், மதிப்பு மிக்க நண்பராகவுமே இந்தியாவை சவுதி அரேபியா பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். #SaudiArabiaCrown #MohammedBinSalman #India 
    பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி டெல்லி வருகிறார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணியசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணியசாமி இன்று பதிவிட்டுள்ளார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi 
    ×