search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு பரவல்"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அவ்வப்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்துக்கரைகள், கால்வாய் கரைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இந்த தூய்மை பணி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் ஆவின் பாலகத்துக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் ஏராளமான புற்களும், செடி-கொடிகளும் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது. அந்த புதர்களை வெட்டி அகற்றும் பணி இன்று நடந்தது. இந்த தூய்மை பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. காய்ச்சல் பாதிப்பானது பரவலாக உள்ளதே தவிர ஒரே இடத்தில் மக்கள் மொத்தமாக பாதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. காய்ச்சல் பாதிப்பை கண்காணிக்க களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் 1,165 பணியாளர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டு உள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் பரவியதையடுத்து குமரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. 5 சோதனைச் சாவடிகளில் போலீசாருடன் சுகாதாரத்துறை பணியாளர்கள் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் நகர மற்றும் கிராமப்புறங்களில் சமீபநாட்களாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையினர் கணக்குப்படி கடந்த ஒரு மாதத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் குறித்த தகவலையும் சுகாதாரத்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். உள்ளாட்சி நிர்வாகத்தினர், வார்டு வாரியாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அக்டோபர் தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஒற்றை இலக்கத்துக்கு வந்தது.

    5முதல் 10-க்குள் இருந்த அன்றாட பாதிப்பு நேற்று முன்தினம் ஒன்றாக மாறியது. மாத துவக்கத்தில், கண்காணிப்பில் 101 பேர் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி 20க்கும் குறைவானவர்கள் சுகாதாரத்துறை பட்டியலில் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று முன்தினம் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் தினசரி பாதிப்பு பூஜ்யம் என்ற நிலையை எட்டும். கொரோனா இல்லாத மாவட்டமாக விரைவில் திருப்பூர் மாறும் என்றனர்.

    ×