search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீக்கடைக்காரர் பலி"

    • பிரேம்குமார் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார்.
    • தீ விபத்து தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பிரேம்குமார். இவர் கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு இருப்பதை அறியாமல் அடுப்பை பற்ற வைத்தார். இதில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பிரேம்குமார் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நடந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளக்கால் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 54). இவர் வீ.கே.புதூரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகள் சண்முகசுந்தரிக்கு வீ.கே.புதூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி உள்ளது. சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(20) என்ற வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளும், பேச்சிமுத்துவின் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×