search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் வெறிச்செயல்"

    ஆத்தூர் அருகே பலாத்கார முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டிரைவர் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சி சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமிவேல் (வயது 48). விவசாயி. இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது45).

    இவர்களது கடைசி மகளான ராஜலட்சுமி அருகில் உள்ள தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சாமுவேலின் வீட்டின் அருகே குழந்தைவேல் மகன் தினேஷ்குமார் என்ற கார்த்தி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்டங்களுக்கு நெல் அறுவடைக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். குடிப்பழக்கம் கொண்ட தினேஷ்குமார் கடந்த 3 நாட்களாக போதையிலேயே சுற்றி வந்தார். பள்ளிக்கு சென்ற சிறுமி ராஜலட்சுமியை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வதும், சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் வீட்டில் ராஜலட்சுமி மல்லிகை பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தினேஷ்குமார் ராஜலட்சுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் சின்னபொண்ணு பதறி அடித்தபடி ஓடி வந்தார்.

    அப்போது தினேஷ்குமார், சின்னபொண்ணுவை கீழே தள்ளிவிட்டு விட்டு கையில் இருந்த அரிவாளால் ராஜலட்சுமியின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதில் ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது.

    பின்னர் தலையை தனியாக துண்டித்து எடுத்தார். இதில் ராஜலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடலை வெளியே இழுத்து சென்றார். இதை பார்த்த அவரது தாய் கதறி அழுதபடி ஓடினார். பின்னர் ரத்தம் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை தளவாய்பட்டி- சுந்தராபுரம் சாலையின் நடுவே வைத்து விட்டு தினேஷ்குமார் தப்பி ஓடினார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் சிறுமியின் உடல், தலையை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவி ராஜலட்சுமி, தினேஷ்குமார் மனைவியுடன் நெருக்கமாக பழகி வந்தார். அவர் வீட்டிற்கு சென்று, பூக்கள் பறித்து வருவது வழக்கம். கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்த தினேஷ்குமார், மாணவியிடம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. சைகோ போல சுற்றி திரிந்த தினேஷ்குமார் நேற்று மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்ததுடன் மறுத்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    தினேஷ் குமாரின் மனைவி சாரதா கூறியதாவது:-

    நெல் அறுவடை எந்திரம் வாங்க கடனுதவி கிடைக்காததால் தஞ்சாவூரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் வேலைக்கு தினேஷ்குமார் சென்றார். அங்கு உடன் வேலை பார்த்து தொழிலாளர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி கோபத்தில் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    அங்கு கொட்டகையில் தங்காமல், சில மாதங்களாக இரவில் சுடுகாட்டில் தூங்கியதால் இந்த நிலை வந்ததாக தினேஷ்குமார் கூறி வந்தார். இதனால் ஆத்தூரை சேர்ந்த வாகன உரிமையாளர் ராமு அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நீ மேலும் நீ மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வா என்று அவர் கூறி உள்ளார்.

    10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் நான் தான் ‘முனி’ என்று கூறி சாமி ஆடினார். சுடுகாட்டில் படுத்ததால் எனக்கு பேய், பிசாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், வி‌ஷம் குடித்து இறந்தவர்கள், கிணற்றில் விழுந்து இறந்தவர்கள் பெயரையும் கூறி வந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜலட்சுமி எங்கு இருக்கிறார். உடனே இங்கு வரச் சொல். நான் அவரை பார்க்க வேண்டும் என கூறினார். உடனே நாங்கள், தினேஷ்குமாரின் முகத்தில் தண்ணீரை தெளித்து, சத்தம் போடாமல் ஒழுங்காக இருக்கும்படி கூறினோம்.

    சைக்கோ போல் சுற்றி வந்த அவர் ஆவேசமாக பேசியதுடன் உறவினர்களை அடிக்கவும் போவார். வாயில் வந்தபடி திட்டினார். இந்த நிலையில் எனது கணவர் மாணவி ராஜலட்சுமியை கொலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த பின்பு தான் எனக்கு இது பற்றி தெரியும். இதனால் அதிர்ச்சியில் உறைந்த நானும், எனது கணவரின் தம்பியும் சேர்ந்து தினேஷ்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×