search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் கண்டக்டர் தாக்குதல்"

    • பஸ் புதுக்கோட்டைக்கு பஸ் வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர்.
    • வாலிபர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சுங்கச்சாவடிக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை நாகர்கோவில் கே.கே.நகரை சேர்ந்த டிரைவர் சணல்குமார் (வயது 50) ஓட்டினார். நாகர்கோவில் அம்மாண்டிவிளையை சேர்ந்த தனசேகர் (50) கண்டக்டராக பணியாற்றினார்.

    பஸ் புதுக்கோட்டைக்கு பஸ் வந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். நண்பர்களான அவர்கள் தங்களில் ஒருவரை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த வாலிபருக்கும், கண்டக்டர் தனசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே அந்த வாலிபரை கண்டக்டர் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்டு விட்டு சென்றார்.

    இதுகுறித்து வாலிபர் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் 6 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சுங்கச்சாவடிக்கு வந்தனர். அவர்கள் நண்பரையும் அழைத்துக்கொண்டு அந்த பஸ்சை விரட்டி சென்றனர். சில கிலோ மீட்டர் தொலைவில் அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் தாக்கி சேதப்படுத்தினர். அதன்பிறகு டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்து தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். பின்னர் 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி அண்ணா நகர் 5-வது தெரு காளீஸ்வரன் (வயது26), 6-வது தெரு அருண்குமார் (18) மற்றும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக முனீஸ்வரன் (24) உட்பட மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை.
    • புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.

    புதுவை அரசு போக்குவரத்து பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக நேர பிரச்னை தலைதூக்கி வருகிறது. பி.ஆர்.டி.சி. டிரைவர்கள், கண்டக்டர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குகின்றனர்.

    இந்த சம்பவங்களை கண்டித்து நேற்று முன்தினம் முதல் பிஆர்டிசி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    3-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி பாதுகாப்பு இல்லை, பணி நிரந்தரம் செய்யவில்லை என கோஷம் எழுப்பினர்.

    இதனால் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை, மாகி, திருப்பதி உட்பட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. ஊழியர்களின் முதல் நாள் போராட்டத்தால் ரூ.2.50 லட்சம், 2-ம் நாள் போராட்டத்தால் ரூ.6.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை, காரைக்காலை சேர்ந்த பி.ஆர்.டி.சி. ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் என 12 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நிர்வாகத்துடன் எதிர்கட்சி தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எடுக்க முயற்சித்து வருகிறார்.

    புதுவையில் தனியார் பஸ்கள், டெம்போ, ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுதால் ஊழியர்கள் போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் புதுவையில் இருந்து முத்தியால்பேட்டைக்கு பி.ஆர்.டி.சி. மினி பஸ் புறப்பட்டு சென்றது. அதனை டிரைவர் சிவலிங்கம் ஓட்டினார்.

    அப்போது அங்கு வந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் இணைந்து சிவலிங்கத்திடம் நேர பிரச்சினையை காரணம் காட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த சிவலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பி.ஆர்.டி.சி. டிரைவர்- கண்டக்டர்கள் தாக்கப்பட்டனர்.

    பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. டி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அவைகள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னை- திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×