search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவரை தாக்கிய தொழிலாளி கைது"

    • பொள்ளாச்சி டெப்போவுக்குட்பட்ட அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்
    • ஆத்திரம் அடைந்த மணிமாறன் பஸ்சை பின் தொடர்ந்து வந்து டிரைவரிடம் தகராறு செய்தார்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது44). இவர் ெபாள்ளாச்சி டெப்போவுக்குட்பட்ட அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பஸ்சில் அடிக்கடி பயணம் செய்யும் ஆனைமலை நரிக்கால்பதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிமாறன் (21) என்பவர் பஸ்சில் பயணம் செய்யும் பெண்களை கிண்டல் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் சைகை காட்டி பஸ்சை நிறுத்தினார். ஆனால் இதனை பார்த்த டிரைவர் முருகானந்தம் பஸ்சை நிறுத்தாமல் அருகே உள்ள எட்டித்துறை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிமாறன் பஸ்சை பின் தொடர்ந்து வந்து டிரைவரிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரைவரை கீழே தள்ளி விட்டு அங்கு இருந்து சென்றார்.

    இது குறித்து அரசு பஸ் டிரைவர் முருகானந்தம் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×