search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரம்ப் நிர்வாகம்"

    பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளி-கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எனவே அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள், தஞ்சம் கோர முடியாது என்று டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #DonaldTrump #AsylumClaims
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் குடியேறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மத்திய அமெரிக்க நாட்டினர், அமெரிக்கா வந்து தஞ்சம் அடைவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் ‘கேரவன்’ வாகனங்களில் வருவதை ‘படையெடுப்பு’ என்று டிரம்ப் விமர்சித்து வந்தார்.

    நடந்து முடிந்த இடைக்கால தேர்தல் பிரசாரத்தின்போதும், மத்திய அமெரிக்க நாட்டினர் வருகைக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டார். அது மட்டுமின்றி மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க வர முயற்சிக்கிறவர்களை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் எல்லையில் அவர் பல்லாயிரக்கணக்கில் படை வீரர்களை குவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமையன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சி.என்.என். நிருபர் அகோஸ்டா இந்தப் பிரச்சினையை எழுப்பியபோதுதான் டிரம்புடன் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிரடியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்கள் தஞ்சம் கோர முடியாது என கூறும் புதிய விதியை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வகிக்கும் மேத்யூ விட்டேகரும், உள்நாட்டு பாதுகாப்பு வல்லுனர் கிர்ஸ்ட்ஜென் நீல்சனும் இடைக்கால இறுதி விதி என்ற பெயரில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டப்படி, அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்கிற பட்சத்தில், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிற வெளிநாட்டினரை தடுத்து நிறுத்துகிற அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அவர்கள் மீது சரியானது என கருதப்படுகிற எந்தவொரு கட்டுப்பாட்டையும் அவரால் விதிக்கவும் முடியும்.

    இப்படியான ஜனாதிபதியின் தடை உத்தரவை மீறுவோரையும், அகதிகளுக்கான தகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவர்களையும் தடை செய்வதற்கு நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகவும் யாரும் சட்டவிரோதமாக நுழைந்து தஞ்சம் கோர முடியாது என கூறப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனங்கள் குவிகின்றன.

    இதுபற்றி அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவிக்கையில், “அகதிகள் தஞ்சம் கோர முடியாது என டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள விதி, சட்ட விரோதமானது” என கூறியது.

    ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச்செயலாளர் குமி நாய்டூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்த கொள்கை முடிவானது, ஆயிரக்கணக்கான அகதிகளின் வாழ்க்கையை அபாயத்தில் கொண்டு போய் விட்டுள்ளது” என கூறப்பட் டுள்ளது.
    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GreenCard #TrumpAdministration
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது. இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன. #GreenCard #TrumpAdministration  
    அகதிகள் விவகாரத்தில் குழந்தைகளை பெற்றோருடன் இணைக்க ஆகும் செலவை அரசுதான் ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்துக்கு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

    இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்பின் அகதிகள் கொள்கைக்கு அவரது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் டிரம்ப் பணிந்தார். அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரிக்கும் கொள்கையை திரும்பப்பெற்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமை யூனியன் ஒரு வழக்கை கலிபோர்னியா மாகாணம், சாண்டீகோவில் உள்ள கோர்ட்டில் தொடுத்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டானா சாப்ரா, “ பிரித்து வைக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் பெற்றோர்களுடன் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஆகிற செலவை பெற்றோர்கள் தர வேண்டியது இல்லை. அமெரிக்க அரசுதான் இந்த செலவை ஏற்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டார்.

    முதலில் ஒரு குழந்தையை பெற்றோருடன் இணைப்பதற்கு பெற்றோர் 1900 டாலர் (சுமார் ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம்) தர வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  #DonaldTrump #Tamilnews 
    அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 10 உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 80 லட்சம்) தொழில் முதலீடு செய்கிற வெளிநாட்டினருக்கு ‘இ.பி-5 விசா’ வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் வருகிறவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ என்ற நிரந்தர சட்டப்பூர்வ குடி உரிமை கிடைக்கிறது.

    இந்த விசா ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு தரப்படுகிறது. ஒரு நாட்டுக்கு அதிகபட்சம் 7 சதவீதம் வழங்கப்படும்.

    ஆனால் இந்த திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த விசா திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஒன்று, இந்த விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    இந்த விசா திட்டத்தின் கீழ் அதிகமாக விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, வியட்நாமைத் தொடர்ந்து இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

    சீனாதான் அதிகளவில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ×