search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பில் கிரிக்கெட்"

    • 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • குவாலிபயர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    6-வது டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    சேலத்தில் நடந்த "குவாலிபயர் 1" ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 140 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன் இலக்காக இருந்தது.

    பாபா அபராஜித் அதிக பட்சமாக 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷாஜகான் 13 பந்தில் 25 ரன்னும் (3சிக்சர்) எடுத்தனர். மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டும், சாய்கிஷோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சாய் கிஷோர் 27 பந்தில் 43 ரன்னும் (2 பவுண்டரி ,4 சிக்சர்) கேப்டன் கவுசிக் காந்தி 46 பந்தில் 40 ரன்னும் (1பவுண்டரி, 2 சிக்சர்), ஆர்.சதீஷ் 19 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கார்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டும், அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறியதாவது:-

    தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டும் தான் உள்ளது என்பதால் எதையும் வித்தியாசமாக செய்யாமல் அதிகம் வெற்றி பெற மட்டுமே முயற்சிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சாய்கிஷோர் கூறும்போது, 'மிகுந்த நம்பிக்கையுடன் என்னை தயார்படுத்திக் கொண்டே இருந்தேன். கிடைக்கும் தருணத்தில் ஷாட்களை அடித்தேன்" என்றார்.

    தோல்வி குறித்து நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் கூறும்போது, 'நாங்கள் இன்னும் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். எங்களின் பந்து வீச்சாளர்கள் முடிந்தவரை போராாடினார்கள். இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதால் அதில் வென்று மீண்டும் எங்கள் பயணத்தை தொடருவோம்' என்றார்.

    கோவையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 'குவாலிபயர் 2' ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக தகுதிபெறும்.

    • திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது.
    • மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.

    சேலம்:

    8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

    இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் -மதுரை அணிகள் மோதுகின்றன. திருப்பூர் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி , 3 தோல்வி அடைந்துள்ளது. மதுரை அணி விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி,1 தோல்வி அடைந்துள்ளது.

    • பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார்.
    • நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை என தோல்வி குறித்து சேலம் அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.

    கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் சேலம் அணிக்கு 136 ரன் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது.

    கேப்டன் அணிருதா 22 பந்தில் 32 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாப்னா 29 ரன்னும், அரவிந்த் 25 ரன்னும் எடுத்தனர். டாரியல் பெராரியோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

    ரவி கார்த்திகேயன் அதிகபட்சமாக 25 பந்தில் 36 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மோகன் பிரசாத் 3 விக்கெட்டும் எம்.முகமது, அரவிந்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    திருப்பூர் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    இந்த வெற்றிக்காக பந்து வீச்சாளர்களை திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் அணிருதா பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் வரை எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் மழையால் பிட்சின் தன்மை சற்று மாறியதால் 135 ரன்களே எடுக்க முடிந்தது. இது நல்ல ஸ்கோர் என்று கருதினோம். அதற்கு ஏற்ற வகையில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் ஸ்பார்டன்ஸ் தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் முருகன் அஸ்வின் கூறும்போது நாங்கள் பவர்பிளேயில் சரியாக ஆடவில்லை. நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. என்ன தவறு செய்தோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம் என்றார்.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ×