search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் மதுக்கடைகள்"

    • டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது.
    • உயர்தர மது வகைகள் ‘லைட்’ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக 'டாஸ்மாக்' கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆப் பாட்டில் ரூ.20 அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.

    பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்கிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது. சாதாரண மது வகைகளில் 43 பிராண்டுகளும், நடுத்தர அளவில் 49 பிராண்டுகளும், 128 பிரீமியம் பிராண்டுகளும் விற்பனையாகி வருகிறது.

    உயர்தர மது வகைகள் 'லைட்' கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அரசுக்கும் இப்போது நிதி நெருக்கடி அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    ×