search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் தமிழிசை"

    அரசியல்வாதிகள் குறைகூறி அரசு ஆஸ்பத்திரிகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடாது என டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்படும் விதத்தை திமுக தலைவர் முகஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் விமர்சித்தனர்.

    இதை கண்டித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஏழை, எளிய மக்கள் தங்கள் உடல் உபாதைகளுக்காக செல்லும் ஒரே புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    நிகழ்ந்துவிட்ட ஒரு தவறுக்காக ஒட்டுமொத்தமாக அரசு ஆஸ்பத்திரிகளை அரசியல்வாதிகள் குறை சொல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடகூடாது.

    அரசு ஆஸ்பத்திரிகளை குறை சொல்லும் அரசியல்வாதிகள் அரசு ஆஸ்பத்திரி வாசலைக் கூட மிதிப்பது கிடையாது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருகிறார். #GajaCyclone #TamilisaiSoundararajan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருவது மக்களை கவர்ந்துள்ளது.

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி, தனது சொந்த செலவிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்தார். ஒரு நடமாடும் ஆம்புலன்சையும் தயார் செய்து 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

    3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்.



    பேராவூரணி, புதுக்கோட்டையை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தார். போகும் வழிகளில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியும், அவர்களுக்கு உடனடி தேவை என்ன என்பதையும் கேட்டு குறித்து கொள்கிறார். மறுநாள் அதில் முடிந்தவற்றை செய்து கொடுக்கிறார். மருத்துவ குழுவினருடன் பா.ஜனதா தொண்டர்களும் செல்கிறார்கள்.

    நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 37 கிராமங்களுக்கு இந்த குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர்.

    பகல் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளிலேயே சுற்றிவரும் இந்த குழுவினர் கிராமங்களில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

    இரவு வரை நிவாரண உதவிகள் வழங்கும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலேயே தங்குகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவை தாண்டியும் யாராவது வரமாட்டார்களா ஆறுதலாக இருக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். அவர்களுக்கு இப்போது மனரீதியான ஆறுதலும் தேவை. அவர்களுடன் அமர்ந்தாலே வலியை மறந்து ஆறுதல் அடைகிறார்கள்.

    முகாம்களில் உள்ளவர்களுக்கு உடல்வலி, சளி, இருமல், காய்ச்சல் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகளை வழங்கி வருகிறோம்.

    மேலும் சத்து மருந்துகள், புரோட்டீன், நாப்கின், டெட்டால் போன்றவற்றையும் வழங்குகிறோம். தொடர்ந்து நிவாரண பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த மனிதாபிமான உதவிகளைகூட கொச்சைப்படுத்தி சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. களத்தில் மக்களோடு மக்களாக இருக்கிறேன். அவர்களின் ஆதரவும், செய்யும் நிவாரண பணிகளும் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #TamilisaiSoundararajan

    ×