search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதி ஓட்டம்"

    • 200 மாணவர்கள்,விழாக்குழுவினர் வெள்ளை சீருடையுடன் பங்கேற்பு
    • பொற்றையடியில் இருந்து கோட்டார் வரை நடந்தது

    நாகர்கோவில் :

    ஸ்ரீ நாராயண குருவின் 169-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பொற்றையடி அருகே மருந்துவாழ்மலை சதய பூஜை சங்க வளாகத்தில் இருந்து தொடர் ஜோதி ஓட்டமானது புறப்பட்டது.

    கோட்டார் நாராயண குரு பள்ளியை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் விழா குழுவினர் வெள்ளை சீருடையுடன் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்ற னர். பொற்றையடியில் இருந்து புறப்பட்ட ஜோதி ஓட்டமானது ஈத்தங்காடு, சுசீந்திரம், இடலாக்குடி வழியாக கோட்டார் நாராயண குரு மணி மண்டபத்தை வந்தடைந்தது.

    ஜோதியை இந்து கல்லூரி ஆட்சிமன்ற குழு துணை தலைவர் கோபாலன் பெற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. விழா குழு தலைவர் நாக ராஜன் தலைமை தாங்கி னார். துணை தலைவர் கோபாலன், செயலாளர் சுப்ரமணியன், துணை செயலாளர் மணி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் ராமசாமி வர வேற்று பேசினார். வழக்கறி ஞர் சதீஷ்குமார், துணை தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்து கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் நாகராஜன், மனோன்ம ணியம் சுந்தரனார் பல்க லைக்கழகத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதைத்தொ டர்ந்து நாராயண குரு பிறந்த நாளையொட்டி நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மண்டப பணியாளர்களுக்கு உறுப்பினர்கள் ராமசாமி, முருகன் ஆகியோர் சீருடை களை வழங்கினர். பொருளா ளர் நடேஷ் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அன்னதானத்தை முத்து தொடங்கி வைத்தார்.

    மாலை 5.30 மணிக்கு மேஜிக் ஷோ மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாராயண குரு பிறந்த நாளையொட்டி கோட்டா ரில் உள்ள அவரது மணி மண்டபம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலித் தது. மேலும் கோட்டார் பகுதியில் அவரது பிறந்த நாளை ஒட்டி கொடி தோரணங்களும் கட்டப் பட்டு இருந்தது.

    • 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன.
    • இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

    உலக வரலாற்றில் சென்னை பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை 44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும் விளையாடுகின்றன.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்று சிறப்புமிக்க ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

    டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சுற்றிவரும். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜூலை 28ம் தேதி அன்று தமிழகத்தில் முதல்வர் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்குகிறது.

    செஸ் ஜோதி ஓட்ட தொடக்க விழாவில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

    முதல்முறையாக தொடங்கப்படும் இந்த ஜோதி ஓட்டம் இனிவரும் ஒலிம்பியாட் தொடர்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×