search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேசிபி"

    • ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
    • ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட சுந்தர சோழபுரம் பகுதியில் தாழங்குளம் என்ற இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து தாழங்குளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது வருவாய் துறை மூலம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழங்குளத்தில் அப்பகுதி மழை நீரை கொண்டு விட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று திருவேற்காடு போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா தலைமையில் பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி முன்னிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள் உள்பட 75 பேர் கொண்ட குழுவினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் 11 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றினர்.பின்னர் அங்கிருந்த 50 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.
    • தலைமறைவாக உள்ள வினோத், முனுசாமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி தெல்லனஅள்ளி காலனி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது36). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் மகளும் உள்ளனர்.

    இவர் தெல்லனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே மனைவியின் பெயரில் புதிதாக வீட்டு மனை வாங்கி அதில் வீடு கட்டி வந்தார்.

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (48), அண்ணாமலை (50), வினோத் (26), முனுசாமி (67) ஆகியோர் இப்பகுதியில் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருவதால் நீ வீடு கட்ட கூடாது என வேல்முருகனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஆனால் வேல்முருகன் வீடு கட்டும் பணியை தொடர்ந்து செய்து வந்ததால், ஆத்திரமடைந்த கோவிந்தன், அண்ணாமலை, வினோத், முனுசாமி ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சென்று வேல்முருகன் கட்டி வரும் வீட்டை இடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அருகில் காவலுக்கு உறங்கி கொண்டிருந்த கட்டிட வேலை செய்த நபர்கள் மற்றும் வேல்முருகன் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது ஜேசிபி எந்திரம் மூலம் இடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேல்முருகன் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் கோவிந்தன், அண்ணாமலை ஆகிய 2 பேரை கைது செய்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வினோத், முனுசாமி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×