என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜெராக்ஸ் கடை உரிமையாளர்
நீங்கள் தேடியது "ஜெராக்ஸ் கடை உரிமையாளர்"
சோழிங்கநல்லூர் அருகே அமெரிக்க டாலர் தருவதாக கூறி ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் ரூ. 1½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
பனையூரை சேர்ந்தவர் ரியாஸ். கானாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார்.
ரியாசிடம் பேச்சுக் கொடுத்த அவர் தன்னிடம் ரூ. 3 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் உள்ளன. ரூ. 1½ லட்சம் ரொக்கம் கொடுத்தால் அமெரிக்க டாலரை தருவதாக கூறினார்.
இதனை நம்பிய ரியாஸ் அமெரிக்க டாலரை வாங்க ஒப்புக்கொண்டார். நேற்று மாலை அவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வரவழைத்து அந்த வாலிபரிடம் ரூ. 1½ லட்சத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிக் கொண்ட வாலிபர் பின்னர் ரியாசிடம் காகிதப் பார்சலை கொடுத்தார். அதில் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக கூறினார். அதனை பெற்றுக் கொண்ட ரியாஸ் வீட்டுக்கு வந்ததும் பார்சலை பிரித்து பார்த்தார்.
அதில், வெற்றுக் காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க டாலர் கொடுப்பதாக மர்ம வாலிபர் ரூ. 1½ லட்சத்தை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ரியாஸ் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குறித்த மற்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை. மோசடி வாலிபரை பிடிக்க போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான அவரது உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.
பனையூரை சேர்ந்தவர் ரியாஸ். கானாத்தூரில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார்.
ரியாசிடம் பேச்சுக் கொடுத்த அவர் தன்னிடம் ரூ. 3 லட்சம் மதிப்பில் அமெரிக்க டாலர்கள் உள்ளன. ரூ. 1½ லட்சம் ரொக்கம் கொடுத்தால் அமெரிக்க டாலரை தருவதாக கூறினார்.
இதனை நம்பிய ரியாஸ் அமெரிக்க டாலரை வாங்க ஒப்புக்கொண்டார். நேற்று மாலை அவர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே வரவழைத்து அந்த வாலிபரிடம் ரூ. 1½ லட்சத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிக் கொண்ட வாலிபர் பின்னர் ரியாசிடம் காகிதப் பார்சலை கொடுத்தார். அதில் அமெரிக்க டாலர்கள் இருப்பதாக கூறினார். அதனை பெற்றுக் கொண்ட ரியாஸ் வீட்டுக்கு வந்ததும் பார்சலை பிரித்து பார்த்தார்.
அதில், வெற்றுக் காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க டாலர் கொடுப்பதாக மர்ம வாலிபர் ரூ. 1½ லட்சத்தை பறித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ரியாஸ் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்தார். மோசடியில் ஈடுபட்ட வாலிபர் குறித்த மற்ற விபரங்கள் அவருக்கு தெரியவில்லை. மோசடி வாலிபரை பிடிக்க போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான அவரது உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X