search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயலலிதா நினைவு இல்லம்"

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா நிலையம் இல்லம் உள்ளது.

    இந்த இல்லத்தை நினைவு இடமாக மாற்ற கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    சட்டபடியான வாரிசுதாரர்களான எங்களிடம் கருத்துகேட்காமல் அரசு முடிவு எடுத்து உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சே‌ஷசாயி அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே மெரினா கடற்கரையில் நினைவிடம் இருக்கும் போது மற்றொரு நினைவகத்தை மக்களின் வரிபணத்தில் உருவாக்குவதை ஏற்கமுடியாது.

    தீபக்-தீபா

    இந்த வேதா நிலையத்தின் சாவி சென்னை மாவட்ட கலெக்டரிடம் உள்ளது. அந்த சாவியை மூன்று வாரத்திற்குள் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பின் நகலை இணைத்து சென்னை மாவட்ட கலெக்டரிடம் தீபா மற்றும் தீபக் ஆகியோர் இன்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்ல சாவியை அரசு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அரசு வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருக்கும் தீர்ப்புக்கு ஜெ.தீபா வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என அவர் கூறியுள்ளார்.
    சென்னை :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், அதனை மனுதாரர்களான தீபா, தீபக்கிடம் 3 வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இந்த சாதகமான தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

    கேள்வி:- இந்த வழக்கு நடைபெற்றபோது ஏதேனும் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிட்டதா?

    பதில்:- இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அ.தி.மு.க. கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.

    கேள்வி:- வேதா இல்லத்தின் சாவி எப்போது உங்கள் கையில் கிடைக்க போகிறது?

    பதில்:- தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நிறைய சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அதை நாங்கள் செய்யவேண்டும்.

    வேதா இல்லம்

    கேள்வி:- வேதா இல்லம் அ.தி.மு.க.வின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    பதில்:- இது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

    கேள்வி:- இந்த தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

    பதில்:- அப்படி ஏதாவது நடந்தால், சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம்.

    கேள்வி:- வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் திட்டம் இருக்கிறதா?

    பதில்:- அப்படி எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

    கேள்வி:- எப்போது வேதா நிலையம் செல்ல இருக்கிறீர்கள்?

    பதில்:- நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

    மேற்கண்டவாறு ஜெ.தீபா பதில் அளித்தார்.

    வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    ஜெயலலிதாவுக்கு வேதா நிலையம், பீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடம் எதற்கு? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

    அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். 

    அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

    மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

    இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வேதா இல்லம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்ட வேண்டிய ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக அவரது போயஸ் கார்டன் இல்லம் முடக்கப்பட்டதாக ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. #VedhaNilayam #Poesgarden #MadrasHC
    சென்னை:

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணமடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பேரில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கு ஜெயலலிதாவின் உறவினர்களான தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். போயஸ் கார்டன் இல்லத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கோரி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் அரசு சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார்கள்.

    இதற்கிடையே ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

    நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்தும், அவர் ஏதாவது வரி பாக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதற்கு வருமான வரித்துறை சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் பதில் அளிக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை ஆணையர் ஜி.சோபா அந்த பதிலை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா கடந்த 1990-91ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரை சொத்து வரி பாக்கியாக ரூ.10 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 407 வைத்துள்ளார். 2005-06ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரை வருமான வரி பாக்கியாக ரூ.6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்து 720 வைத்துள்ளார்.


    இதற்காக அவரது போயஸ் கார்டன் வீடு, அண்ணா சாலையில் உள்ள பார்சன் காம்ளக்சில் உள்ள தரை தளம் ஆகியவை கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி முடக்கம் செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு மார்ச் 13ந்தேதி செயின் மேரிஸ் சாலையில் உள்ள அவரது சொத்து முடக்கம் செய்யப்பட்டது.

    ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி முடக்கம் செய்யப்பட்டது.

    இவ்வாறு வருமான வரித்துறை பதிலில் கூறப்பட்டுள்ளது.

    வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சீனிவாசன் வாதாடுகையில், ‘ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தி விட்டால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை’ என்று கூறினார்.

    அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், கூறுகையில், ‘ஜெயலலிதாவின் சொத்து வரி மற்றும் வருமான வரிப் பாக்கியை தமிழக அரசு செலுத்த தயாராக உள்ளது’ என்றார்.

    உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘ஜெயலலிதா என்ற தனி நபரின் வருமான வரி பாக்கியை தமிழக அரசு எப்படி செலுத்த முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்து கூறியதாவது:-

    ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு மற்றும் நிலத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆர்ஜிதம் செய்யும். அப்போது அந்த சொத்துக்குரிய மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பீட்டு அளவில் கணக்கிடப்படும்.

    அந்த தொகை ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு வழங்கப்படும். அந்த தொகையில் இருந்து இந்த வரியை தமிழக அரசு செலுத்தும்.

    மேலும், போயஸ் கார்டன் வீட்டை தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வாரிசுகளான அவர்கள் வரி பாக்கியை செலுத்துவார்கள்’.

    இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.

    இதையடுத்து வருமான வரித்துறையின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் கூறியதாவது:-

    1990 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் சொத்து வரி பாக்கி 2005-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலான வருமான வரி பாக்கித் தொகை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்பின்னர் வந்த நிதியாண்டில் அவர் வரி செலுத்தி விட்டாரா? என்று தெரியவில்லை. இந்த அறிக்கை அரைகுறையாக உள்ளது. எனவே, தெளிவான அறிக்கையை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல, தமிழக அரசும் இந்த வரி பாக்கி செலுத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். #VedhaNilayam #Poesgarden #Jayalalithaa #MadrasHC
    ×