search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயந்தி விழா"

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் அஷ்டநாக விஸ்வரூப கல் கருடர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    நேற்று கருட ஜெயந்தியை முன்னிட்டு 21 அடி உயர கருடருக்கு கருட ஹோமம் , சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், அனுமந்த ஹோமம், மகாலக்ஷ்மி ஹோமம் ஆகிய ஹோமங்களுடன், சிறப்பு நவ கலச அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று வாஸ்து நாளை முன்னிட்டு அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பீடாதிபதி முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர்.

    • காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
    • தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை அருகே மதுக்கரை கடைவீதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

    வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) சீரடி சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா இந்த கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    அதனை முன்னிட்டு நேற்று துவாரகா மாயிவாழ் ஆனந்த சாய் டிரஸ்ட் சார்பில் ஏழை பெண்களுக்கு புத்தாடைகளும், மளிகை பொருட்களும் வழங்க ப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு புத்தாடைகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி சென்றனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சாய்பாபாவின் ஜெயந்தி தின விழா நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 6 மணிக்கு பெருந்திரு மஞ்சனமும், 7 மணிக்கு பேரொளி வழிபாடும், 8 மணிக்கு பாபாவின் சத் சரித பாராயணமும், 12 மணிக்கு மத்தியான ஆரத்தியும் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சத்யநாராயண பூஜையும், 6 மணிக்கு மாலை ஆரத்தியும் நடைபெற உள்ளது

    30-ந் தேதி (வியாழக் கிழமை) காலை 6 மணிக்கு காகட ஆரதியும், 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும், 9 மணிக்கு பாபாவின் சத் சரிதை பாராயணமும், 11:30 மணிக்கு கோமாதா பூஜையும், மதியம் 1 மணிக்கு மத்தியான ஆரதியும், சிங்காரி மேளம் நடைபெற உள்ளது.

    மாலை 4 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாபா ஊர்வலமாக மதுக்கரை கடைவீதி, மதுக்கரை மார்க்கெட், முத்துக்குமரன் பஸ் நிறுத்தம், அன்பு நகர் வழியாக வந்து கோவிலை சென்று அடையும். மாலை 6:30 மணிக்கு நாட்டிய ஆச்சாரியார் பட்டம் பெற்ற சுவாமி கிருஷ்ணா ஆனந்தஜியின் பரதநாட்டியம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நாதஸ்வர கச்சேரியும் நடைபெற உள்ளது.

    இரவு 9 மணிக்கு இரவு ஆரதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. பாபாவின் ஜெயந்தி தின விழாவில் அனைத்து பக்த கோடிகளும் கலந்து கொண்டு பாபாவின் அருள் பெற்று செல்லுமாறு விழாக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

    • அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா நடந்தது.
    • நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட ராஜபாளையம்-மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாத சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

    2 நாட்கள் நடந்த விழாவில் முதல் நாள் பாண்டுரங்கன் பஜனை மண்டலி குழுவினரின் பஜனைகளுடன் விழா தொடங்கியது. அதிகாலை கும்ப ஜெயம் அபிஷேகம், வெள்ளி கவசஅலங்காரம் நடந்தது. 2-ம் நாள் காலை தீபாராதனையும், பஜம் கோவிந்தம் சாதனா குழுவினரின் ஆன்மீக பக்தி பஜனையும் நடந்தது.

    அனுமன் சுவாமிக்கு 108 வடை மாலை, 108 அதிரச மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தன. பூசாரி கண்ணன்சுவாமி, தியாேனஸ், ராம்சிங் பூஜைகளை நடத்தினர். குழந்தைகள், பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கூடி நின்று சுவாமியை வழிபட்டனர்.

    ஹரி நாம சங்கீர்த்தனம் நந்தலாலா பஜன்ஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரி சந்திரசேகர் குழுவினரால் நடத்தப்பட்டது .

    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் ராஜுக்கள் மகிமைப்பட்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி ராஜா, தொழிலதிபர் டாக்டர் குவைத்ராஜா, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.

    • 27-ந்தேதி தொடங்கி டிசம்பர் 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி நாளை பங்கேற்பு

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் யோகி ராம்சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து டிசம்பர் 1-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இதைெயாட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு ஹோமம், புனித நீரால் பகவான் யோகி ராம்சுரத்குமார் விக்கிரகத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 72 மணி நேரம் ஜெபிக்கப்படும் அகண்ட நாமம் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து பூஜை, நெல்லை வேதா ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம், உச்சிகால பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, பூஜை நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு ேஹாமம், யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், பூஜை, கடலில் இருந்து வந்த சித்தி முத்தி வலம்புரி விநாயகர் கோவிலுக்கு வருஷாபிஷேகம், திருவாசகம் முற்றோதுதல் ஆகியவை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தக்கலை யோகிராம் ஹெல்த்கேர் சென்டர் சார்பில் இலவச மருத்துவ முகாம், உச்சிகாலை பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு பூஜை, இசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    நாளை (30-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு ஹோமம், யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், பூஜை, மாஞ்சாங்குடியிருப்பு ரகுராம் ஹோமியோ சித்தா ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு மூன்று முகயோகி ராம்சுரத்குமார் விக்கிரகத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து மந்திராலய அலுவலகம், நூலகம் ஆகியவற்றையும் திறந்து வைத்து சாதுக்கள் பூஜையில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து உச்சிகால பூஜை, அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு பொன்காமராஜ் சுவாமிகள் பஜனை குழுவினர் நடத்தும் ரம்யம் பஜனை, பூைஜ ஆகியவை நடைபெறுகிறது. 1-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஹோமம், முக்கடல் புனித தீர்த்தத்தால் யோகி ராம்சுரத்குமார் விக்ரகத்திற்கு அபிஷேகம், அகண்ட நாமம் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல், பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, கலசாபிஷேகம், 11.30 மணிக்கு யோகி ராம்சுரத்கு மார் விக்ரகத்திற்கு வெள்ளிக்கவ சம் அணிவித்தல், பூஜை, அன்ன தானம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பாபிஷேகம், பிற்பகல் 3 மணிக்கு யோகிராம்சுரத்குமார் பஞ்சலோக விக்ரகம் அலங்காரத்துடன் ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 9.30 மணிக்கு சாதுக்கள் பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மந்திராலய குரு பொன் காமராஜ் சுவாமிகள், தவசி, அபிமன்யு மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குரு பூஜை நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.
    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 -வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநிலத் தலைவர் பசும்பொன் மு.முத்தையா தேவர் நிர்வாகிகளுடன் சென்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தேவரின் ஜெயந்தி விழாவை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
    ×