என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜாக்டோ ஜியோ மாநாடு"
- 4 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு
- தீவுத்திடலில் வருகிற 10-ந் தேதி நடக்கிறது
வேலூர்:
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஜாக்டோ -ஜியோ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா. ஜனார்த்தனன், சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் பாபு வரவேற்றார்.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னை தீவு திடலில் வருகிற 10-ந் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். வேலூர் மாவட்டம் சார்பில் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி மாநாடு நடத்த உள்ளோம்.
- தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சென்னை:
ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செல்வம் தெரிவித்தார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஜாக்டோ ஜியோ சார்பில் முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்திய போதும், எங்களது மனுவை கூட பெறவில்லை.
தற்போதைய தி.மு.க. அரசு ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. எங்களது கோரிக்கை மனுவையும் முதல்-அமைச்சரிடம் வழங்கி உள்ளோம்.
முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியபோது, குறைந்த பட்சம் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை. அதனால் போராட்டங்களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறார்.
ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி மாநாடு நடத்த உள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்