search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி சந்தையில்"

    • பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள மாநக ராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய் கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொங்கல் வியா பாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். பொங்கல் பண்டிகை, அடுத்த மாதம் தைப்பூசம் வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்த னர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    இன்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

    கம்பளி, பெட்சீட் குழந்தை களுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது. சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதேபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது அய்யப்பன் சீசன், தைப்பூசம் வர உள்ளது. இதனால் காவி துண்டு, காவி வேஷ்டி, காவி சேலை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    வேஷ்டிகள் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகி–றது. அதேபோல் துண்டுகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஈரோடு ஜவுளி சந்தை, மணி கூண்டு பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    • புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெ ற்றதாக வியாபாரிகள் கூறினர். புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    கர்நாடகா, ஆந்திரா, போன்ற வெளிமாநி லங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவ ட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    இன்று சேலம், செஞ்சி, ஆரணி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கம்பளி, பெட்சீட் குழந்தைகளுக்கான ஆடைகள், காட்டன் துணிகள் அதிக அளவில் விற்பனையானது.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 45 சதவீதம் நடைபெற்றது. இதுபோல் மொத்த விற்பனை 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.
    • மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறும்.

    இந்த சந்தைக்கு தமிழ்நா ட்டின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும், கேரளா கர்நாடகா, ஆந்திரா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்கின்றனர்.

    மற்ற இடங்களை காட்டி லும் இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்ப தால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக விசேஷ நாட்கள் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் கோவில்களில் அடுத்தடுத்து விசேஷங்கள் வருகின்றன.இதேபோல் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளது.

    இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி பாவாடை, நைட்டி, சர்ட், வேட்டி சட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் சில்லறை வியாபாரம் சற்று மந்தமாக நடந்தது.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில் இருந்து தீபாவளி விற்பனை களை கட்டும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×