search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமாத் உத் தவா"

    மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது. #Pakistan #MumbaiAttack
    இஸ்லாமாபாத்:

    கடந்த 2008-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது, ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத இயக்கம் ஆகும். புலவாமா தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன. எனவே, ஜமாத்- உத்-தவாவுக்கும், அதன் அறக்கட்டளையான பலா-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று தடை விதித்தது.

    பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. #Pakistan #MumbaiAttack
    ×