search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து மதிப்பீடு"

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்ததற்கு கணக்கு சொல்ல வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது. #Congress #RahulGandhi #LSPolls #BJP
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2004 முதல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.

    அவர் 2004-ல் போட்டியிடும் போது தனது வருமானம் ரூ.56 லட்சம் என்று கூறி இருந்தார். 2009 தேர்தலில் வருமானம் ரூ.2 கோடி என்றும், 2014 தேர்தலில் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். அதாவது 10 ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.8½ கோடி அதிகரித்து உள்ளது.

    இது சம்பந்தமாக பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் சாம்பித் பத்ரா கூறியதாவது:-

    ராகுல்காந்தி எம்.பி.ஆக இருப்பதால் அதற்கான சம்பளத்தை பெற்று வருகிறார். இது தவிர அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. ஆனால் அவரது வருமானம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக ஒவ்வொரு தேர்தல் வேட்பு மனுவிலும் குறிப்பிட்டு உள்ளார்.

    அவருக்கு வருமானம் எந்த வகையில் வந்தது. எப்படி இவ்வளவு தொகை அதிகரித்தது என்பதற்கு கணக்கு சொல்ல வேண்டும்.

    ராகுலும், பிரியங்கா காந்தியும் 4.69 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை 6 மாதம் ரூ.6 லட்சத்து 70 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றுக்கு அந்த பண்ணை வீடு சொந்தமானது.

    அந்த நிறுவனம் மீது வழக்கு விசாரணை இருந்து வருகிறது. ராகுல்காந்திக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. குத்தகைக்கு விட்ட பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசில் அந்த நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படவில்லை.

    2-ஜி செல்போன் தொடர்புடைய யுனிடெக் நிறுவன சொத்தை ராகுல்காந்தி குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இதிலும் ஏதோ தவறு நடந்து இருக்கிறது.

    ராகுல்-சோனியாவுக்கு ரூ.100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #RahulGandhi #LSPolls #BJP
    தெலுங்கு முன்னணி நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன்கல்யாணுக்கு ரூ.52 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #PawanKalyan
    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

    தெலுங்கு முன்னணி நடிகர் பவன்கல்யாண் அங்கு ஜனசேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் சில சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறார்.

    பவன்கல்யாண் கஜுவாகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவர் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    அவர் தனது மனுவில் ரூ.52 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். அதில் ரூ.12 கோடிக்கு அசையும் சொத்துக்களும், ரூ.40 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அசையும் சொத்துக்களில் தனது மனைவி பெயரில் ரூ.30 லட்சம் சொத்தும், தன்னை சார்ந்தவர்களிடம் ரூ.1 கோடியே 51 லட்சம் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவி பெயரில் ரூ.40 லட்சம் அசையா சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் ரூ.72 லட்சம் மதிப்புள்ள பென்ஸ்கார், ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள வால்வோ கார், ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஹார்லே டேவிட்சன் கார் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.27 லட்சத்துக்கு தனது பெயரிலும், ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்துக்கு மனைவி பெயரிலும் நகைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் தனக்கு ரூ.33 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். 2013-14-ல் பவன்கல்யாண் தனக்கு ரூ.7 கோடியே 32 லட்சம் வருமானங்கள் இருந்ததாக வருமானவரி கணக்கில் தாக்கல் செய்துள்ளார். #PawanKalyan
    ×