search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதமான சாலை"

    • இந்த சாலைகளில் பயணிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அணைக்காடு தனியார் பப்ளிக் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போதிய பராமரிப்பின்மை மற்றும் சேதமடைந்துள்ளதால், இந்த சாலைகளில் தினமும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    சாலைகளின் தற்போதைய நிலை போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை பாதிக்கிறது.தாய்மார்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி குழந்தைகளுடன் கீழே விழுந்த சம்பவங்கள் ஏராளம்.

    இந்த சாலையின் முற்றிலும் உடைந்த பள்ளத்தை கடக்க முயன்ற போது தாயின் கட்டுப்பாட்டை இழந்த ஒரு குழந்தை திறந்தவெளி பள்ளத்தில் விழுந்தது மிகவும் அதிர்ச்சியளித்தது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தனர்.

    • மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.
    • இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மோதிர மலையை சுற்றி சுமார் 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி காணி இன மக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    குண்டும் குழியுமான சாலை

    மலைவாழ் மக்கள் பயிரிடப்படும் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு குலசேகரம் சந்தைக்கு தினமும் அரசு பஸ்சில் தான் வந்து செல்வார்கள். மேலும் அங்கு உள்ள மாணவ-மாணவிகளும் தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அரசு பஸ்சை நம்பி தான் உள்ளார்கள்.

    கோதையாறு மலை கிராமத்தில் மின் உற்பத்தி நிலையம், அரசு ரப்பர் கழகம் மற்றும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் என ஏராளம் அரசு அலுவலங்களும் உள்ளன. மின்வாரிய அலுவலகத்தில் பணி புரிபவர்களின் குடியிருப்புகளும் உள்ளது.

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த ஆண்டு மழைவாழ் மக்கள் அனைத்து கட்சியினருடன் பஸ் மறியல் போராட்டம் நடத்தினார்கள். காலையில் இருந்து மாலைவரை போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை சீரமைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    அதன்பிறகு பெய்த கனமழையால் சாலை, மீண்டும் மிக மோசமாக பழுதடைந்து காணப்பட்டது. இரவு நேரங்களில் அரசு டிரைவர்கள் பஸ்சை ஓட்ட முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வந்தார்கள். தற்போது இந்த சாலைகள் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு தரமற்ற நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் தரமற்ற இந்த சாலையில் அரசு பஸ்களை இயக்க மாட்டோம் என திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணிமனை டிரைவர்கள் கூறியதை தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.
    • சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டி ப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.

    தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்ப டையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. மாமங்கலம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாலை வழியாக பள்ளிக்கு வருகிறார்கள்.

    அப்பொழுது செம்மண் ஏற்றி செல்லும் லாரி அதி வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சாலைகளிலே தண்ணீர் ஊற்றி செல்வதால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. சாலையும் மிகவும் படுமோசமான குண்டும் குழியுமாக உள்ளது.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதி அடைந்து ஒதுங்க கூட முடியவில்லை. மணல் ஏற்றி வரும் லாரிகள் சாலைகளில் விதிமுறை களை பின்பற்றாமல் அதி வேகமாக சென்று வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் கூட லாரியின் வேகத்தை குறைக்காமல் சென்று வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமா என பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி தனியார் நிலங்களில் மண் குவிக்கப்பட்டு கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. செம்மண் எடுக்கும் இடத்தில் அரசு அறிவித்த அளவைவிட 50 அடிக்கும் மேலாக வெட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

    பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களில் லாரிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர்.

    • கீழக்கரையில் சேதமான சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கைவினையாளர்கள் சங்கம் சார்பில் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

    கீழக்கரை

    திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடையில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

    இதுதொடர்பாக பனைத்தொழிலாளர் மற்றும் கைவினையாளர்கள் சங்கம் சார்பில் வட்டார தலைவி கலைவாணி, காமாட்சி உள்ளிட்ட பெண்கள் ஊர்மக்கள் கையெழுத்திட்ட மனுவை கலெக்டர் ஜானிடாம் வர்கீசிடம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மேதலோடை மற்றும் அருகில் உள்ள காடுகாரன்வலசை, ஈசுப்புலி வலசை, மாரி வலசை, பன்னிவெட்டி வலசை, உமையன் வலசை, மேதலோடை (வடக்கு), அய்யனார்புரம் ஆகிய 8 கிராமங்களில் 450 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் வசிக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.

    10-ம் வகுப்பிற்கு மேல் எங்கள் ஊரில் இருந்து 4 கி.மீ., ல் உள்ள வண்ணாங்குண்டு அரசு மேல்நிலை பள்ளிக்குதான் செல்ல வேண்டும். அங்கு 150 மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்த பள்ளிக்கு மேதலோடை (தெற்கு) பகுதியில் இருந்து வண்ணாங்குண்டு செல்லும் 4 கி.மீ., சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாக பள்ளி செல்ல பஸ் வசதியும் இல்லை. இதனால் சாலையில் மாணவர்கள் நடந்தும், சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயமடைகின்றனர்.

    இந்த சாலையை உடனடியாக சீரமைத்து பஸ் வசதி செய்ய வேண்டும். தினைக்குளத்தில் உள்ள மேதலோடை துணை சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×