search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ்வரி"

    • பலசரக்கு மளிகை நடத்திவரும் வணிகர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பாக இருந்தது.
    • வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்டவேண்டிய அவசியமில்லை.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு விற்பனை மையங்களில், அதாவது மார்க்கெட்டிங் கமிட்டிகளில் உள்ளே விற்கப்படும் விளைபொருட்களுக்கு செஸ்வரி விதிக்கும் நடைமுறை இருந்து வருகின்றது. ஆனால், அரசு அதிகாரிகள் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியிலும், வழிகளில் செல்லும் வாகனங்களிலும் ஆய்வு செய்து, சட்டத்திற்கு புறம்பாக செஸ்வரி விதித்து வந்தனர். இது பல்வேறு வகைகளில் வேளாண் விளைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் வணிகர்கள் மட்டுமல்லாது, பலசரக்கு மளிகை நடத்திவரும் வணிகர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பாக இருந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை எண்.84/23-04-2022-ன் மூலம் செஸ்வரி விதிப்பு சம்பந்தமாக ஆணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அழுத்தம் கொடுத்து வந்தது. அதன் அடிப்படையில் 3-1-2023 அன்று அரசாணை எண்.1-ன் மூலம் அரசாணை எண்.84/23-4-2022 திரும்பப்பெறப்பட்டது.

    எனவே, மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்டவேண்டிய அவசியமில்லை என்பதை, ஏற்கனவே அரசாணை எண்.84 ரத்து செய்யப்பட்டதன் மூலம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்திருப்பதற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தனது மகிழ்ச்சியையும், வரவேற்பையும் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை அரசு அதிகாரிகள், வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது என மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
    • இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அவனியாபுரம்

    மதுரை விமான நிலையம் வந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி-சேலை சம்பந்தமாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை. அதேபோல் இந்த ஆண்டும் தரமான வேட்டி-ேசலை வழங்கப்படும்.

    தி.மு.க. ஆட்சியில் கைத்தறி துறை தற்போது நல்ல மாற்றம் அடைந்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது எப்படி மக்களுக்கான திட்டங்களை கொடுத்தாரோ அதேபோல் இரண்டு மடங்காக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாங்கள் தவறு செய்தால்கூட எங்களை முதல்வர் விடமாட்டார்.

    பருத்தி தட்டுப்பாடு என்பது நம் கையில் இல்லை. மத்திய அரசிடம் தான் உள்ளது.

    தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பிறகு பருத்திக்கான 1 சதவீத செஸ் வரியை குறைக்க கோரிக்கை விடுத்ேதாம். அதன்படி சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது 1 சதவீத வரி குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்துறைைய பலப்படுத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி துறை இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×