search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தாம்பரம்"

    அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார். #SilaghatTambaram #weeklyexpresstrain
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் மத்திய பகுதியில் வசிக்கும் நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், சென்னை செல்வதற்காக ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் சிலாகட் பகுதியை சென்னை தாம்பரத்துடன் இணைக்கும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று தொடங்கி வைத்தார்.

    அசாம் மாநிலத்தின் நகாவ் ரெயில் நிலையத்தில் இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று சிலாகட்  - தாம்பரம் இடையிலான வாராந்திர புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.50 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

    இதேபோல், திங்கட்கிழமை இரவு 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு சிலாகட்டை அடையும்.

    இந்த வாராந்திர ரெயில் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என ராஜன் கோஹைன் தெரிவித்தார்.
    #SilaghatTambaram #weeklyexpresstrain
    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சென்னை:

    திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு கீழ்க் கண்ட சிறப்பு கட்டண ரெயில் கள் இயக்கப்பட உள்ளது.

    வேளாங்கண்ணி-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06086) செப்டம்பர் 1, 5, 6-ந் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    தாம்பரம்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06087) வருகிற 28, 31-ந் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    சென்னை சென்டிரல்-வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06089) வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6-ந் தேதியும் சென்டிரலில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06090) வருகிற 31 மற்றும் செப்டம்பர் 7-ந் தேதியும் இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    நாகர்கோவில்- வேளாங் கண்ணி சிறப்பு கட்டண ரெயில்(06093) செப்டம்பர் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு கட்டண ரெயில்(06094) செப்டம்பர் 3-ந் தேதி இரவு 11.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×