search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி"

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பின் மைதானத்தில் டோனி, பிராவோ இடையே நடைபெற்ற போட்டி வைரலாக பரவி வருகிறது. #IPL2018 #CSK #MSDhoni #Bravo
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.


    இறுதி போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது டோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றது. இருவரும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மூன்று ரன்கள் ஓட முடிவு எடுத்தனர். யார் முதலில் வருவார்கள் என இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இதனை மற்றவர்கள் கண்டு ரசித்தனர்.

    இருவரும் வெற்றி பெற வேகமாக ஓடினர். இறுதியில் கேப்டன் கூல் டோனி முதலில் கோட்டை தொட்டு வெற்றி பெற்றார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் டோனியின் வேகத்தை பிராவோவால் ஈடுசெய்ய முடியவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர். #IPL2018 #CSK #MSDhoni #Bravo
    ஐபிஎல் 2018 தொடரில் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சனுக்கு கேப்டன் டோனி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    புதுடெல்லி:

    ஐபிஎல் 2018 தொடர் நேற்று முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

    கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், வெற்றிக்கோப்பையை கையில் வைத்து, தனது மனைவி, குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் டோனி பதிவு செய்திருந்தார். அத்துடன், சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் மும்பைக்கை நன்றி. 'ஷேன் ஷாக்கிங் வாட்சன்' சிறப்பாக இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்று தந்தார். ஷிவா டிராபியை வாங்குவது குறித்து கவலைப்பட வில்லை. அவள் மைதானத்தில் இறங்கி ஓட வேண்டும் என எண்ணினாள்.


    இவ்வாறு டோனி குறிப்பிட்டிருந்தார். வாட்சனை, ஷாக்கிங் வாட்சன் என அவர் குறிப்பிட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018 #CSK #MSDhoni #shockingwatson
    ×