search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை என்ஜினீயர்"

    பெங்களூரில் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்ற சென்னை என்ஜினீயரை காரில் கடத்தி 8 மணி நேரம் அடித்து உதைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்தவர் அனுராக் சர்மா. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    அனுராக் சர்மா தனது குடும்ப நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றார். அதன் பிறகு சென்னை செல்ல தனியார் பஸ்சுக்காக இரவு 12 மணிக்கு பூம்மாசன்ட்ரா பஸ்நிலையத்தில் காத்து இருந்தார்.

    அப்போது கார் ஒன்று வந்தது. அதில் இருந்த 2 பேர் அனுராக் சர்மாவை திடீரென்று காருக்குள் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்த மேலும் 2 பேர் காருக்குள் ஏறிக் கொண்டனர். அவர்கள் அனுராக் சர்மாவை சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.

    இரும்பு கம்பியால் அவரது காலில் தாக்கினார்கள். பின்னர் அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் அடித்து உதைத்தனர்.

    காலை 9 மணி அளவில் அனுராக் சர்மாவிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பறித்தனர். அதன் ரகசிய எண்ணை சொல்லும்படி அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் சொல்ல மறுத்ததால் மீண்டும் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்.

    இதனால் அனுராக் சர்மா ஏ.டி.எம். ரகசிய எண்ணை கொள்ளை கும்பலிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த கும்பல் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அனுராக் சர்மா கார்டில் இருந்து ரூ.45 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் அவரை சந்திரபுரா பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பினர்.

    படுகாயத்துடன் தவித்த அனுராக் சர்மா அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசாரிடம் அவர் கூறும்போது, கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி ராகுல், உமேஷ் என்ற பெயர்களை உச்சரித்தப்படி இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி பூராலிங்கயா கூறும்போது, “குற்றவாளிகளை 2 நாட்களில் பிடித்து விடுவோம். கொள்ளை தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து விட்டோம்” என்றார். #tamilnews
    இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் சென்னை என்ஜினீயர் ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது 2-வது மகன் விக்னேஷ் (25).

    இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சென்னையில் ஒரு கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

    இதற்கிடையே விக்னேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) கொடுமுடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விக்னேஷ் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக இருவர் வீட்டு உறவினர்களும் திருமண மண்டபத்தில் கூடினர்.

    திருமணத்தையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து விக்னேஷ் புது மாப்பிள்ளை களையுடன் ஊருக்கு வந்தார்.

    தனக்கு திருமணம் நடப்பதையொட்டி நேற்று ஊரில் உள்ள தனது நண்பர்களை வரவழைத்து “பார்ட்டி’’யும் கொடுத்து சந்தோ‌ஷமாக இருந்தார்.

    இந்த நிலையில் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் குரங்கன் பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதியில் புதுமாப்பிளை விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது பற்றி கிடைத்த தகவல்படி ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புது மாப்பிள்ளை தற்கொலையில் மர்மம் நீடித்து வருகிறது. சந்தோ‌ஷமாக சென்னையில் இருந்து வந்த விக்னேஷ் நண்பர்களுக்கு திருமண பார்ட்டியும் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய காரணம் என்ன? அவருக்கு திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்று மண மாலை சூட இருந்த புது மாப்பிள்ளை விக்னேசின் மர்ம சாவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.



    ×