search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல் சூளை தொழிலாளர்கள்"

    • செங்கல் சூளைக்கு தேவையான முக்கிய முலப்பொருளான செம்மன் எடுக்க கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • செம்மன் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அந்தியூர்-அத்தாணி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டம் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    செங்கல் சூளைக்கு தேவையான முக்கிய முலப்பொருளான செம்மன் எடுக்க கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் செங்கல் உற்பத்தி முடங்கியது. மேலும் தொழிலாளர்களும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து செம்மன் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் அந்தியூர்-அத்தாணி பிரதான சாலையில் திடீரென மறியல் போராட்டம் செய்தனர்.

    இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும்வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, விஜயகுமார், மற்றும் வருவாய் ஆய்வாளர் சுதாகர், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து மறியல் செய்த தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    ×