search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யா 37"

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். டீசரை பார்க்கும் போது படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக வருகிறாரா? அல்லது போராளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதிய தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான? உள்ளிட்ட வசனங்கள் தற்போதைய தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.



    இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 30-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    காப்பான் டீசர்:

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் நடித்து வரும் சூர்யா, படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார். #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று முடிந்தததாக படக்குழு அறிவித்தது.

    இந்த நிலையில், மொத்த படக்குழுவினருக்கும் நடிகர் சூர்யா இன்று பிரியாணி விருந்து அளித்தார். காப்பான் படக்குழுவுக்கு சூர்யா பிரியாணி பரிமாறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் பாடல் காட்சியை படக்குழு படமாக்கி வருவதாகவும், அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு ஒரு பாடலை படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.


    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya
     
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன் லால் - ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Kaappaan #Suriya
    `மாற்றான்' படத்திற்கு பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

    முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

    இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

    70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் காப்பான் படக்குழுவில் இணையவிருக்கிறார். #Kaappaan #Suriya37 #Suriya

    சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 37’ படத்தின் தலைப்பிற்காக இயக்குனர் கே.வி.ஆனந்த் ரசிகர்களிடம் வாக்கு கேட்டிருக்கிறார். #Suriya37 #Suriya
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. 



    இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு தேடி வருகிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார். இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது. எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே படத்திற்கு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Suriya37 
    சூர்யா - ஹரி கூட்டணி இதுவரை 4 படங்களில் இணைந்திருக்கும் நிலையில், அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் இருவரும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya #Hari
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’.

    இந்த படத்துடன் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி, சிராக் ஜானி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்பு பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்கிறார்கள். 

    இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.



    இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, ஹரி இயக்குகிறார். இது ‘சிங்கம்’ படத்தின் நான்காவது பாகம் கிடையாது. புதிய கதைக்களத்துடன் இருவரும் களம் இறங்குகின்றனர். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Suriya #Hari

    அறிமுகமான ஒரு சில படங்களின் மூலமே முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சாயிஷா சய்கல் தான் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவே ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார். #SayyeshaaSeigal
    சாயிஷா சய்கல் அறிமுகமான வேகத்திலேயே முன்னணி நடிகையாகிவிட்டார். தற்போது சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    வசனத்தை மனப்பாடம் பண்ணித்தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கிறீர்களாமே?

    மொழி தெரியாதவர்கள் தான் பிராம்ப்டிங் வைத்து டயலாக் பேசுவார்கள். எனக்கு பிராம்ப்டிங் பண்ண தெரியாது. கேமரா ஆனில் இருக்கும்போது ஒருவர் டயலாக் சொல்லி சொல்லி அதை அப்படியே சொல்வது என்பது ரசிகர்களை ஏமாற்றும் வேலை. டயலாக்கை மனப்பாடம் செய்து பேசும்போது தான் அந்த காட்சிக்கு தகுந்த ரியாக்‌‌ஷன் வரும். எனவே பிராம்ப்டிங் பண்ணுவதில்லை.



    யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை..?

    பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். சிறு வயதில் இருந்தே நடனம் கற்று வருகிறேன். எனக்கு 10க்கும் மேற்பட்ட வகை நடனம் தெரியும். அதனால் முழு நீள நடனப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

    குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதே?

    தினமும் காலையில் டீ குடிக்கும்போது பேப்பர் படிக்கிறது என் வழக்கம். சென்னையில 11 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் பத்திப் படிச்சதும் மனசு தாங்கலை. தொடர்ந்து குழந்தைகள் மேல நிகழ்த்தப்படும் குற்றங்கள் வருத்தத்தைத் தருது. சட்டங்கள் கடுமையாக்கப்படணும். அது மட்டும் போதாது. மக்கள் இன்னும் அதிக விழிப்புணர்வோடு இருக்கணும்.



    எந்த வி‌ஷயத்தையும் உடனே கத்துக்கணும்னு நினைக்கிற என் ஆர்வம்தான். ஒரு வி‌ஷயத்துல ஈடுபட்டா, அதுல நூறு சதவீதம் வெற்றிபெறணும். புதுசா சாதிக்கணும். சின்ன வயசுலயே எல்லாவிதமான டான்ஸையும் கத்துக்கிட்டேன். இப்பவும் நேரம் கிடைச்சா டான்ஸ் ரிகர்சலுக்கு போவேன். லத்தீன் அமெரிக்கன் ஸ்டைலில் சம்பா, சல்சா டான்ஸ் தெரியும். கதக் தெரியும். சினிமாவுக்கு தேவையான டான்ஸ் தெரியும். லத்தீன் அமெரிக்காவுக்கு போய், அவங்களோட பாடிலாங்குவேஜையும், எப்படி டான்ஸ் பண்றாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக் கிட்டிருக்கேன். #SayyeshaaSeigal

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #Chiragjani
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்தில் ஆர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சிரக் ஜனி ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிரக் ஜனிக்கு பிறந்தநாள் பரிசாக இந்த அறிவிப்பை கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Suriya37 #Chiragjani

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 37-வது படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் நிலையில், படக்குழுவில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார். #Suriya37
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தமாகியுள்ளனர். 

    கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேதி பிரச்சனையால் படக்குழுவில் இருந்து விலகுவதாக அல்லு சிரிஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அல்லு சிரிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

    `தற்போது தெலுங்கில் உருவாகும் ஏபிசிடி படத்தில் நடித்து வருகிறேன். இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடப்பதால் சூர்யா படத்தில் என்னால் இடம்பெற முடியவில்லை. படப்பிடிப்பை வேறு தேதியிலும் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நானாகவே இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 

    இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு எனது சூழ்நிலை புரியும். அவர் தனது முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இந்த குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். 

    இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். #Suriya37 #AlluSirish

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார். #Suriya37 #KVAnand
    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. படம் அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் திரைக்கு வர இருக்கிறது. #Suriya37 #KVAnand

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #Suriya37 #KVAnand
    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் லண்டனில் நடந்தது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருந்த கேவ்மிக் யு அரி வேறு படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அபிநந்தன் ராமானுஜம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand 

    ×