என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றி திரியும் சிறுத்தை"
- வீடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது.
- நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வன பகுதியில் தீவன பற்றாக்குறையாலும், தண்ணீா் தேடியும் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஊட்டியில் உள்ள பாரஸ்ட் கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் சுற்றி திரியும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது. சப்தம் கேட்டு மற்ற நாய்கள் அங்கு வந்ததால் பாதியில் அந்த சிறுத்தை ஓட்டம் பிடிக்கிறது.
நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்