search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுமலதா அம்பரீஷ்"

    பாராளுமன்ற தேர்தலில் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்று மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் கூறினார். #ParliamentElection #Sumalatha
    மாண்டியா:

    மாண்டியாவில் நேற்று இரவு நடிகையும், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியுமான சுமலதா அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பேரில் நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா?, வேண்டாமா? என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி நான் காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசினேன். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கிடையே என்னைப்பற்றி பல வதந்திகளும், பொய்யான செய்திகளும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. மேலும் நான் மாண்டியா தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்றும் சிலர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.



    நான் இந்த தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா? அல்லது சுயேச்சையாக போட்டியிடுகிறேனா? என்பது தான் இங்கு கேள்விக்குறி?. மற்றபடி நான் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவே இன்னும் 5 நாட்கள் முழுமையாக உள்ளது. அதற்குள் எப்படியும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழும்.

    அதில் எனக்கு தகுந்தாற்போல் சில சாதகமான விஷயங்களும் நடக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு சுமலதா அம்பரீஷ் கூறினார். #ParliamentElection #Sumalatha

    மண்டியா மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்துள்ளதாக நடிகர் அம்பரீஷ் நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது சுமலதா அம்பரீஷ் கூறினார். #SumalathaAmbarish #MandyaConstituency
    பெங்களூரு:

    நடிகர் அம்பரீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவர் காங்கிரசில் இருந்தார். சித்தராமையா மந்திரிசபையில் இடம் பெற்று பணியாற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சுமலதாவை அம்பரீசின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசிய சுமலதா, பாராளுமன்ற தேர்தலில் தான் மண்டியா தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாகவும், காங்கிரஸ் சார்பில் டிக்கெட் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    கூட்டணியில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் டிக்கெட் கிடைக்காவிட்டால், மண்டியாவில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளார்.



    அவரை தங்கள் கட்சிக்கு இழுத்து போட்டியிட வைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் மண்டியா மக்களுக்கு சேவையாற்ற தான் தயார் என்று சுமலதா அறிவித்துள்ளார்.

    நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்து 3 மாதங்கள் ஆவதையொட்டி, அவரது மனைவி சுமலதா உள்பட குடும்பத்தினர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்களுக்கு சேவையாற்ற நான் முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்காக அரசியல் தந்திரத்தில் ஈடுபட மாட்டேன். அம்பரீஷ் காங்கிரசில் இருந்தார். அதனால் மக்கள் பணியாற்ற காங்கிரசில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    மண்டியா மக்கள் வலியுறுத்தியதால், மக்கள் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளேன். அம்பரீசின் அன்பு, என்னை இதுவரை அழைத்து வந்துள்ளது. மண்டியா மக்களுடன் நான் எப்போதும் இருப்பேன்.

    இவ்வாறு சுமலதா கூறினார். #SumalathaAmbarish #MandyaConstituency
    ×