search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுடலை மாடசாமி"

    • கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது.
    • கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

    நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை சிவ சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று(சனிக்கிழமை) தொடங்கி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை, காலை 7 மணிக்கு நவகிரக பூஜை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 5 மணிக்கு மங்கள இசை, யாகசாலை நிர்மாணம், புனித நீர் எடுத்து வருதல், 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜைகள், வாஸ்து ஹோமம், இரவு 7 மணிக்கு காப்புகட்டுதல், 10 மணிக்கு புதிய சிலை பிரதிஷ்டை ஆகியவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜைகள் ஆரம்பம், காலை 9 மணிக்கு ஜீவ கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல், தொடர்ந்து கும்பாபிஷேகம், சகல பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு மகேஷ்வர பூஜை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை முத்தாரம்மன் மகளிர் மன்றத்தாரின் திருவிளக்கு பூஜை, இரவு 7:30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

    • சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடந்தது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முகவிலாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக ரதவீதி வழியாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு கும்பம் ஏற்றப்பட்டு, குடியழைப்பு தீபாராதனை நடந்தது.

    கொடை விழா தினமான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனை நடக்கிறது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவ மகா சபை மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
    • இரவில் சுவாமிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது.

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா நடைபெறுவது வழக்கம். கோவிலில் இந்த ஆண்டு ஆனி பெருங்கொடை விழா கடந்த 17-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் சுவாமிக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது.

    விழாவின் சிகர நாளான நேற்று ஆனி பெருங்கொடை விழா நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இரவில் சுவாமிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

    விழாவையொட்டி வாணவேடிக்கை, வில்லிசை, கரகாட்டம், கொம்புதப்பு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் தென்மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் வடக்கு விஜயநாராயணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன், கோவில் ஆய்வாளர் கார்த்திகேஷ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரி, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவகுமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் ஆனிப்பெருங்கொடை விழா வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
    • 23-ந்தேதி மாலையில் மாக்காப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் ஆனிப்பெருங்கொடை விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருகிற 23-ந்தேதி மாலையில் மாக்காப்பு சாத்துதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் மனோன்மணீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம், பாலாபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்கார பூஜை, படைப்புடன் கூடிய சாமக்கொடை, சுவாமிக்கு பொங்கலிட்டு நேர்த்திக்கடனாக கிடா வெட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கொடை விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், கொடைவிழா ஒருங்கிணைப்புக்குழு இ.நடராஜன், ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவகுமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×