search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்"

    மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை உள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Medicalservice

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் நடைபெறும் பயோமெட் 2018 என்கிற உயிர் மூலப் பொருட்கள் உயிர் பொறியியல் மற்றும் நோய் கண்டறிந்து சிகிச்சையளித்தல் பற்றிய நாள் சர்வதேச மாநாட்டினை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதில் உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்பு ஆராய்ச்சிக்கான சி.பி.சர்மா விருது அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைகழக பேராசிரியர் அசுதோஷ் சிலிகோட்டிக்கு வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார். கானா நாட்டின் துணை தூதுவர் மைக்கேல் ஆரூன் என்.என்.ஒக்வே பங்கேற்று பேசினார்.

    வி.ஐ.டி. பயோ மெடிக்கல் செலுலார் மற்றும் மாலிகுலர் தெரனாஸ்டிக்ஸ் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் சரவதேச அளவில் ஜப்பான் இத்தாலி அமெரிக்கா, கனடா, போலந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் மருத்துவர்கள் தொழில் நிறுவன வல்லுநர்கள் பங்கேற்றனர்.

    வி.ஐ.டி.யில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற மாநாடு தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு தலைவர் முனைவர் கீதாமணிவாசகம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சர்வதேச அளவில் இது போன்ற மாநாட்டுளை அரசு சார்ந்த அமைப்புகள் நடத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. வி.ஐ.டி.யில் இது போன்ற மாநாடுகள் நடத்துவது வரவேற்கதக்கது.

    தேசிய அளவில் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மகப்பேறு மருத்துவம் குழந்தை நலம் தொற்று நோய் தடுப்பு ஆகியற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணிகளை முடிக்க அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மருத்துவ ஆராய்ச்சியின் பலன் மக்களை சென்றடைவதில் அதிக காலம் ஆகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்களுடனும் மருந்து தொழில் நிறுவனஙகளுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் ஆராய்ச்சிக்கு கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

    நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செய்கை உறுப்புகள் ஆராய்ச்சி பணியில் சாதனை படைத்தமைக்காக அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர் விஞ்ஞானி அசுதோஷ் சில்கோட்டிக்கு சி.பி.சர்மா விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவம் முக்கிய பாடமாக உள்ளது. மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு பல்வேறு வகைளில் பயனளிக்க கூடியவை. நாட்டில் சுகாதாரமும் கல்வியும் வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு சுகாதாரம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.

    நிகழ்ச்சியில் பெங்களூர் நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ரோஹித்ஷெட்டி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் வி.ஐ.டி. இணைதுணை வேந்தர் முனைவர் நாராயணன் மாநாடு அமைப்பாளர்கள் மோகன்வர்மா, பேராசிரியை வீனாகவுல், அருனைநம்பிராஜ், அமித் ஜெயிஷ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆசிரியை கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.#homebirthattempt

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில், மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவு, மருந்து இருப்புகளை பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மூலம் தமிழக மருத்துவத்துறைக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு ரூ.500 கோடி அளவுக்கு மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி மருந்துகள் தலைமை மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தொற்று நோய் தடுப்பு மையங்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்புகடி உள்ளிட்டவைக்கு வி‌ஷ முறிவு மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடிக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் டாக்டர்களின் பற்றாக்குறையை போக்க மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் டாக்டர்கள் மற்றும் 2 ஆயிரம் நர்சுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதேபோன்று, தற்போது 1000 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 562 பி.ஜி. இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிரசவத்தின் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 68 பேர் என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே, தாய்-சேய் இறப்பு விகிதம் குறைந்ததில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது.

    திருப்பூரில் சமூக வலை தளங்களை பார்த்து பிரசவம் பார்த்த போது கிருத்திகா என்ற ஆசிரியை இறந்துள்ளார். இதுபோன்று யாரும் இணைய தலங்கள், சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் அல்லது மருத்துவம் பார்க்க கூடாது.

    கிருத்திகாவிற்கு சமூக வலைதளங்களை பார்த்து பிரசவம் பார்த்த கணவன் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்து மற்றும் தீவிர சிகிச்சை மையங்கள் 72 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது கலெக்டர் ராமன் மற்றும் டாக்டர்கள் பலர் உடனிருந்தனர். #SocialNetwork  #homebirthattempt

    ×