search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரம் நிறுவனம்"

    • இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பரவல் உயர்வால் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 7,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி பாதிப்பு 7,946 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 223 நாட்களில் இல்லாத அளவுக்கு தற்போது ஒரு நாள் பாதிப்பு உயர்ந்துள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 2 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4 கோடியே 42 லட்சத்து 4 ஆயிரத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயலக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியதாவது:

    அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கோவோவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி சுமார் 6 மில்லியன் இருப்பில் உள்ளது. எனவே இளைஞர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

    அடுத்த 90 நாட்களுக்குள் 6 முதல் 7 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியை இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    சீரம் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் கொரோனாவுக்காக கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தது.
    • ஆதார் பூனாவாலா எனக்கூறி சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளது.

    மும்பை:

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே.

    சில தினங்களுக்கு முன் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். அவர் அவசரமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 554 தேவைப்படுவதாக கூறினார்.

    வாட்ஸ் அப்பின் முகப்படமாக அதார் பூனாவாலா படம் வைக்கப்பட்டு இருந்ததால், அவர் தான் தன்னிடம் பணம் கேட்பதாக சதீஷ் தேஷ்பாண்டே நினைத்தார். இதனால் அவர் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு நிறுவன அதிகாரிகள் மூலமாக பணத்தை அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பிய பிறகு தான், அதார் பூனாவாலா பணம் கேட்டு வாட்ஸ் அப்பில் எந்த குறுந்தகவலும் அனுப்பவில்லை என தெரியவந்தது. மோசடி கும்பல் ஆதார் பூனாவாலா எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்கு பதிந்த புனே பந்த்கார்டன் போலீசார், சீரம் நிறுவன உரிமையாளர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    ×