search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன எல்லை"

    • ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • படையில் புதிதாக சேர்க்கப்படும் வீரர்கள் இந்திய-சீன எல்லைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா எல்லையில் உள்ள கிழக்கு லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தின் தலாங் பகுதிகளில் கடந்த 1962-ம் ஆண்டு சீனா அத்துமீறலில் ஈடுபட்டது.

    இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை பாதுகாப்பதற்காக 90 ஆயிரம் வீரர்களுடன் வலுவான ஐ.டி.பி.பி. எனப்படும் இந்தோ-திபெத் எல்லை காவல் படை உருவாக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீனா மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே அருணாசலப்பிரதேசம் தவாங் பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்த தாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையை வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று வழங்கியது. இதன்மூலம் அந்த படைப் பிரிவில் கூடு தலாக 9,400 வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    கிழக்கு லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதி என அடுத்த டுத்து அத்துமீறலில் சீனா ஈடுபட்டு வரும் சூழலில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த ஒப்புதலின் படி படையில் புதிதாக சேர்க்கப்படும் வீரர்கள் இந்திய-சீன எல்லைப்பகுதியில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    லடாக்கின் எல்லைப் பகுதிகளில் அனைத்து கால நிலைகளிலும் தடையற்ற போக்குவரத்தை உறுதிப் படுத்தும் வகையில் நிமு-பதாம்-டர்ச்சா சாலையை இணைக்கும் 4.1 கி.மீ. நீள ஷின்குன் லா சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

    ரூ.1,681 கோடியில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    இதன்மூலம் லடாக் பகுதியை குறிப்பாக ஜன்ஸ்கர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும் என்று மந்திரி சபை கூட்டத்துக்கு பிறகு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

    • இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.
    • இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது.

    தவாங் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கிருந்து திபெத் பகுதியை முழுமையாக கண்காணிக்கலாம். இதனால் இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது.

    கடந்த 9-ந் தேதியும் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது.

    இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புகார் கூறினார். இந்திய நில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீனா ராணுவம் தயாராகி வருகிறது.ஆனால் மத்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. இந்திய எல்லையை இனி யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது.

    குறிப்பாக சீனாவால் எல்லை கோட்டை தாண்ட முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே எல்லைக்கு ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை.

    ஆனால் ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.

    இதற்கிடையே அருணாச்சல பிரதேச எல்லை பகுதியில் இந்திய ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டது. மேலும் அங்கு போர் விமானங்கள், டிரோன்களும் குவிக்கப்பட்டன. டிரோன்கள் மூலம் எல்லை பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர இந்திய கடற்படையின் பி-81 ரக கண்காணிப்பு போர் விமானமும் எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

    இந்திய எல்லைக்குள் இனி சீனா நுழைவதை தடுக்கவும், இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை விரைவாக சென்றடைய அருணாச்சல எல்லையில் புதிய சாலை அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    சுமார் 1748 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. அடர்ந்த மலை பகுதியில் அமையும் இச்சாலை 2026-ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது.

    ×