search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவச்சந்திரன்"

    • பா.ஜனதா சார்பில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
    • விழாவில் சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.

    தென்காசி:

    கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன், சுடலைமாட சுவாமி கோவில் திடலில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.

    இதில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சேர்மன், பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் விஜய் சேகர், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×