search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை திறப்பு"

    • பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.
    • திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் எதிரே உள்ள மாநில தமிழ் சங்க வளாகத்தில் வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியின் தொடக்கமாக இள முனைவர் திருக்குறள் கி.பிரபா இறை வேண்டல் பாடினார். இசை தென்றல் அருணா சிவாசி திருவள்ளுவர் வாழ்த்து கூறினார். மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பால் வளன் அரசு வரவேற்றார். மேயர் சரவணன் வாழ்த்தி பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம் கலந்து கொண்டு 6 அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் உலகை தமிழால் உயர்த்திடுவோம்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... என தனது பேச்சை தொடங்கினார்.

    நான் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் பிறந்தவன். எனது தாயார் சந்தனத்தாய் நினைவாக எங்களது சங்கத்தின் சார்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உலக தமிழ் சங்கம் மூலமாக தமிழுக்கு தொண்டு செய்யும் வகையில் திருவள்ளுவர் சிலையை நிறுவி வருகிறோம்.

    திருவள்ளுவரை உலகறிய செய்வதோடு, உலகம் முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தமிழின் சிறப்பை உணர்ந்து போற்றவே இந்த முயற்சி. அவரது புகழை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

    தற்போது பாளையங்கோட்டையில் 158-வது திருவள்ளுவர் சிலையை வழங்கி திறந்து வைத்துள்ளேன். திருவள்ளுவரின் பெருமையை தமிழ் சங்கம் உலகம் முழுவதும் பரப்பி கொண்டு இருக்கிறது. 133 அதிகாரங்களில் 1,330 குறள்களில் ஒன்றே முக்கால் அடியிலே திருவள்ளுவர் உலகத்தை அளந்தார். உலகமெல்லாம் உயர்ந்தார். உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நமது மக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் நல்லாசிரியர் ஜான் பீட்டர் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் திவான், ராமசாமி, பாண்டியன், கிருபாகரன், வக்கீல் சுதர்சன், பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் சிலை திறக்கப்பட்டது
    • காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் முழு உருவ சிலையை, காணொலிக்காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பார்த்தசாரதி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.லியாகத்அலி, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அ.பாரதி, கவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சரஸ்வதி சுவாமிகள், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
    • சமண மதத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாதுகாப்பாகவும் உறுதுணை யாகவும் இருக்கும்

    போளூர்:

    போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் மடத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் சகோதரியும் சோழகுலத்தின் இளவரசியமான குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தனர்.

    இந்த விழாவில் டாக்டர் ஸ்ரீ தவள கீர்த்தி பட்டாரக சுவாமிஜி தலைமை வகித்தார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப்ப ணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

    அவர் பேசியதாவது:-

    சமண மதத்தை சேர்ந்தவர்கள் உயிர்களிடத்தில் அன்பு, கருணை, காட்டுவதில் சிறந்தவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு விளைவைக்காதவர்கள் ஜாதி மொழி இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள் கொள்கையை உற்று நோக்கினால் திருவள்ளுவரே சமண மதத்தில் தான் தோன்றியிருப்பாரோ என்ற ஒரு ஐயம் ஏற்படுகிறது.

    சமண மதத்தை சேர்ந்த வர்கள் சிறுபான்மை யனராக இருந்தாலும் அவர்களுக்கு திராவிட அரசு என்றென்றும் பாது காப்பாக உறுதுணை யாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் தலைமை தாங்கினார்.

    ஊட்டி

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1993ஆம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் ரத்னாவதி பாா்த்தசாரதி திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்தனர். சிறுவன் யாழன் திருக்குறள் ஒப்பித்தான். இதில் முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ஆனந்தகுமாா், ஆசிரியா் நல்லகுமாா், புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்கா், நீலகிரி மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் ஆனந்தராஜ், நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா் தங்க அருணா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆசிரியா்கள் நாகநாதன், டெய்ஸி விமலா ராணி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.கே.தண்டபாணி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கூடுவாஞ்சேரியில் நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடந்தது.

    செல்வம் எம். பி., வரலட்சுமி மதுசூதனன் எம். எல்.ஏ. , நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே. லோகநாதன், கவுன்சிலர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 6 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு தள்ளுவண்டி, மற்றும் 3 குளிர்சாதன சவப்பெட்டி ஆகியவற்றை வழங்கினார்.

    முன்னதாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி தி.மு.க. சார்பில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து எம்.கே. தண்டபாணி நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் வண்டலூர் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ. சண்முகம்,கூடுவாஞ்சேரி எம்.கே.டி.சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×