என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுமி சித்ரவதை"
- வீடியோவை பார்த்த பொதுமக்கள் சிறுமியை தாக்கிய பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
- போலீசார் தேடுவதை அறிந்ததும், சிறுமியின் தாயாரும், பாட்டியும் தலைமறைவாகி விட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் 3 வயது சிறுமி ஒருவரை 2 பெண்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பரவியது.
இதனை பார்த்த பொதுமக்கள் சிறுமியை தாக்கிய பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஆர்வலர்கள் சிலர் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தாக்கிய பெண்களை தேடினர்.
இதில் அந்த சம்பவம் வர்க்கலா பகுதியில் நடந்திருப்பது தெரியவந்தது. சிறுமியை தாக்கியது அவரின் தாயாரும், பாட்டியும் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கணவரை கண்டுபிடித்து கைது செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும், சிறுமியின் தாயாரும், பாட்டியும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்