என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுத்தை மீட்பு"
- காட்டுப்பகுதிக்கு சென்ற மின் ஊழியர்கள் அங்கிருந்த 10 அடி ஆழ குழிக்குள் இருந்து சிறுத்தையின் உறுமல் ஓசையை கேட்டனர்.
- குழிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு சிறுத்தையும் 4 காட்டுபன்றிகளும் விழுந்து கிடப்பதை கண்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து விலங்குகள் கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க சூரிய மின்வேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற மின் ஊழியர்கள் அங்கிருந்த 10 அடி ஆழ குழிக்குள் இருந்து சிறுத்தையின் உறுமல் ஓசையை கேட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழிக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு சிறுத்தையும் 4 காட்டுபன்றிகளும் விழுந்து கிடப்பதை கண்டனர்.
உடனே அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குழிக்குள் கிடந்த சிறுத்தை மற்றும் காட்டு பன்றியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக விசேஷ ஏணி கொண்டு வரப்பட்டு குழிக்குள் போடப்பட்டது. அந்த ஏணி வழியாக சிறுத்தை வெளியே வந்தது. வன ஊழியர்கள் அதனை காட்டுக்குள் அனுப்பினர். இதுபோல காட்டு பன்றிகளும் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டன.
காட்டுக்குள் காட்டு பன்றியை வேட்டையாட விரட்டி சென்றபோது சிறுத்தை குழிக்குள் விழுந்தது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்