search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானிய சாகுபடி"

    • நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைப்பெற்றது.
    • சிறுதானிய பயிர்களின் சாகுபடி செய்வதனின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.

    ஈரோடு:

    வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளா ண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் அனை த்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 செயல்படுத்தபடும் நஞ்சை கொளாநல்லி கிராமத்தில் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடைப்பெற்றது.

    பயிற்சி கொடுமுடி வட்டார வேளாண்மை அலுவலர் ரேகா தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் பவானிசாகர் இணை பேராசிரியர் சோபா திங்கள்மணியன் சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

    மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும், சிறுதானிய பயிர்களின் சாகுபடி செய்வதனின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.

    மேலும் சிறுதானிய பயிர்களின் வகைகள், உயிர் உரங்கள் இடுதல் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் தியாக ராஜன் தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் பற்றியும், நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பற்றியும் எடுத்துரைத்தார்.

    வேளாண்மை அலுவலர் ரேகா வேளாண்மை துறையின் நலத்திட்டங்கள் பற்றியும், உயிர் உரங்களின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

    மேலும் உதவி வேளாண்மை அலுவலர் மாதவன் மரக்கன்றுகள் விநியோகம் பற்றியும் மானிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் ரேணுகா உழவன் செயலி, இ-வாடகை, அக்ரிகார்ட், மானிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    மேலும் உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.

    வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.

    ×