search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு மேளா"

    • அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    • 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும்.

    திருப்பூர்,ஆக.28-

    திருப்பூரில் நாளை29, நாளை மறுநாள் 30 -ந் தேதிகளில் பி.எஸ்.என்.எஸ். சிறப்பு மேளா நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் பி.எஸ்.என்.எல்.துணை பொது மேலாளா் பி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, பி.எஸ்.என்.எல்.நிறுவனம் சாா்பில் செல்போன் மற்றும் அதிவேக இணைய (பைபா்) சேவையில் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

    அதன்படி நாளை 29,30-ந்தேதிகளில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் தங்களது அசல் அடையாள ஆவணங்களைக் காண்பித்து பின்வரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இதில் ரூ.275-க்கு அதிவேக இன்டா்நெட் ப்ரீடம் எனும் குறுகிய கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சேவையில் மாதம் ரூ.449 அல்லது ரூ.599 திட்டத்தில் இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.275 மற்றும் ஜிஎஸ்டி. செலுத்தினால் போதுமானது.ஓ.டி.டி.தளத்துடன் கூடிய ரூ.999 திட்டத்தில் புதிய இணைப்பு பெறும் வாடிக்கையாளா்கள் முதல் 75 நாட்களுக்கு ரூ.775 (ஜிஎஸ்டியுடன்) செலுத்தினால் போதுமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×