search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பதக்கம்"

    தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் மற்றும் விருதுகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    1. லாவண்யா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.

    2. நமசிவாயம், துணை காவல் கண்காணிப்பாளர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, மதுரை.

    3. உலகநாதன், காவல் ஆய்வாளர், கம்பம் வடக்கு காவல் நிலையம், தேனி மாவட்டம்.

    4.கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர், வி-7 நொளம்பூர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்.

    5. சரவணன், காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

    6. கிளாஸ்டின் டேவிட், காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்.

    7. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர், பி-3 தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், மதுரை மாநகர்.

    8. சித்ராதேவி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, தேனி மாவட்டம்.

    9. ஜெயந்தி, காவல் ஆய்வாளர், இருப்புப் பாதை காவல் நிலையம், ஜோலார்பேட்டை.

    10. சுரேந்தர், காவல் உதவி ஆய்வாளர், கண்டோன் மென்ட் காவல் நிலையம், திருச்சி மாநகரம்.

    இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்- அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. மகேஷ்குமார் அகர்வால், காவல் ஆணையர், மதுரை மாநகரம், தற்போது காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    2. முத்தரசி, காவல் துறை உதவி தலைவர், (நிர்வாகம்), காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.

    3. கண்ணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

    4. ராஜ்நாராயணன்,காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, அயல் பணி இயக்குநர் அலுவலகம், சென்னை.

    5. ஆனந்தராஜன், காவல் உதவி ஆய்வாளர், திட்டச்சேரி காவல் நிலையம், அயல்பணி, நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு.

    விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

    மேற்கண்ட விருதுகள், முதல்-அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்கூறிய காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். #IndependenceDay #TNCM #EdappadiPalanisamy
    ×