search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஆர்250ஆர்"

    • ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழித்தடங்களில் 1900 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வருகிற 23-ந்தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் இன்று 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சேலம் புதிய பஸ் நிலையம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலை, ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் புதிய விலையை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விலையில் ரூ.559 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்து வேரியன்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் பேஸ் மாடலின் புதிய விலை ரூ.85,234, டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் ரூ.92,675 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



    இதேபோன்று சிரிஆர்250ஆர் பேஸ் மாடல் விலை ரூ.1,64,143 என்றும் டாப் என்ட் ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,93,666 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி ஆகும்.

    இரண்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள்களும் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன. சிபி ஹார்னெட் 160ஆர் இந்தியாவில் ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

    ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பிரான்டு மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் விற்பனைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்தியாவில் சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், 2018 சிபிஆர்250ஆர் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×