search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கன் தோரன்"

    தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
    வெங்காயம் - 2 கப்,
    பூண்டு - 2 தேக்கரண்டி,
    இஞ்சி - 2 தேக்கரண்டி,
    பச்சை மிளகாய் - 8,
    சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
    நல்ல மிளகு பொடி -1 கப்,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    தேங்காயம் (துருவியது) - 1 கப்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    பிரியாணிஇலை - சிறிதளவு.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

    நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

    பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

    இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×